Skip to main content

Posts

Showing posts from July, 2015

அப்துல் கலாம் - அஞ்சலி - நினைவின் மலர்கள்

அப்துல் கலாம் - அஞ்சலி - நினைவின் மலர்கள்     அந்த மனிதரைப் பற்றி பதிவிட இரண்டு நாட்களாகி விட்டது. ஆற்றாமையும் நிலைஇல்லா சிந்தனைகளுமே மனதை அழுத்தி விடுகின்றன. ஏவுகணை மனிதர் என்று அவரை ஊடகங்கள் விளிக்கின்றன,  அவரோ எளிமையின் மனிதராகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார். அவர் பிறருக்கு அறிவுறுத்தியதும்  அவரது வாழ்க்கையும் வேறு வேறு அல்ல. ஒன்றே . என் தலைமுறைக்கு  அவர் ஒரு ஊக்கமிகுந்த வழிகாட்டி , முன்மாதிரி ! அவர்போல் இன்னொரு அரசியல் சார்பற்ற தலைவர், இந்தியர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுவது என்பது நடக்கப்போவதே இல்லை. அவரது எந்த இயல்பும் போற்றுதலுக்கு உரியதாகவே இருந்தது ,  எதைச்சொல்ல !  அவர்  ஐ ஐ டி மாணவனுக்கும் , ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கும் வகுப்பெடுத்தவர், அவர்தம் கேள்விகளுக்காக எப்போதும் செவி கொடுத்தவர். முதுமைக்காலத்திலும் தன ஆசிரியரின் முன் இருக்கையில் பொருந்தி அமராதவர். ஆக்கப்பூர்வமான அறிவியலின் முகவரி அவர். ஏவுகணையையும் வடிவமைத்துள்ளார்  , மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கைக்காலையும் வடிவமைத்துள்ளார். செல்லுமிடமெங்கும் தன் மொழியின் தகைமையை , அறத்தை , ஆக்கங்களை குறள் வ