Skip to main content

Posts

Showing posts from December, 2015

மனங்களில் மனிதம் மலர்ந்த 2015

மனங்களில் மனிதம் மலர்ந்த 2015  இந்த வருடத்தில் எத்தனையோ நிகழ்வுகள் , எல்லாம் கடந்து கண்ணை மூடினால் நினைவில் நிற்பது இரண்டுதான் . மக்கள் தங்கள் மீதான நெகடிவ் பிம்பங்களை எல்லாம் உடைத்தெறிந்த கணங்கள் அவை. மனிதம் மனிதம் மனிதம் மட்டுமே தரிசித்த கணங்கள் அவை. தெய்வம் என்ற ஒன்றை  சகமனிதனிடம்  நேரில் கண்ட வருடம் இது. எத்தனை வருடம் கடந்தாலும் இது நெஞ்சில் நிற்கும். அப்துல் கலாம் என்ற மாமனிதர் மறைந்தார். இங்கு எத்தனையோ பிறர்  இறந்த போதும் , இனி இறக்கும் போதும் இப்படி ஒரு பெருமை கிடைக்குமா தெரியாது . பரந்த பாரதமெங்கும் இன மத மொழி கட்சி ஜாதி எல்லாம் எல்லாம்  கடந்து மனிதர்கள்  கண்ணீர்  உகுத்தது  நம் வாழ்நாளில் நாம்  காணாதது . ஒவ்வொரு வீட்டிலும் துக்கம் சூழ்ந்தது , எதோ தன்  சொந்தம் ஒன்று பிரிந்ததாகவே ஒவ்வொருவரும் நினைக்கத்தோன்றியது. அரசியல் கட்சிகள் அச்சுறுத்த வில்லை , பேனர் வைக்க யாரும் வற்புறுத்த வில்லை ,  பணம் வசூலிக்க வில்லை, பேருந்துகள் நிறுத்தப்படவில்லை , தாமாகவே முன்வந்து மக்கள் ஊருக்கு ஊர் பேனர் வைத்தனர் , இரங்கல் கூட்டம் நடத்தினர் . குழந்தைகள் இளையோர்கள் யாவரும்

பி பி திரும்பி பார்த்தல் 2.0 - 2015

                                                    பி பி திரும்பி பார்த்தல் 2.0  - 2015 26. முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டார் என்ற தகவல்கள் வெளியாகின, எதிர்க்கட்சிகள் உண்மை நிலவரம் கேட்க, கலாம் நினைவஞ்சலிக்கு உடல்நலமின்மையால் வர முடியவில்லை என முதல்வரே சொல்ல நேர்ந்தது . 27. ஸ்டியரிங்கை பிடித்த கையோடு கேமெராவை தூக்கினார் அஜித். அப்புக்குட்டி , ஸ்ருதி என க்ளிக்கித்தள்ளினார். 28. விவசாயிகள் தற்கொலைகளை மத்திய அரசு கொச்சைப்படுத்தியது  .     29. தருமபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தொடர்         மரணமடைய , அப்படி ஒன்று நடக்கவே இல்லை என சாதித்தது அரசு. 30.  பருப்பு விலை ஜெட் ஏறியது, துவரம்பருப்பை துயரம் பருப்பு என பேர்மாற்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டன . காய்கறி விலையும்   உயர , சிக்கன் சாப்பிட்டு காலமோட்டினான் தமிழன். 31. படேல் சமுதாயத்தினர் இடஒதுக்கீட்டுக்கு போராட, காந்தி பூமியில் கலவரம் வெடித்தது. கலவரத்தை தூண்டி கடைசியில் பலான வீடியோவில் மாட்டி காமெடி பீஸானார்  ஹர்த்திக் படேல். 32. தமிழக காய்கறிகளில் பூச்சி மருந்து அதிகம் இருப்பதாக லாரிகளை மறித்து கட்ட
பிடரிக்கு பின்னால் திரும்பி பார்த்தல்  - 2015 கடந்த வருடத்தை (2015)  நாளை முதல் பத்திரிக்கைகள் கிழித்து தோரணம் கட்டப்போகிறார்கள் . தொலைக்காட்சியிலும்  நெட்டிலும் ஏற்கனவே  கிழிக்க ஆரம்பித்து விட்டார்கள், நாமும் கொஞ்சமாவது திரும்பிப் பார்ப்போம். டாப் 50 விஷயங்கள் - 2015  1. மேகே தாட்டுவில் அணை கட்டுவதாக கர்நாடகா வரிந்து கட்டியது.  ஆரம்பத்தில் சவுண்டு விட்ட தமிழக அரசு தற்போது மௌனம் காக்கிறது. 2. அரசு அதிகாரி முத்துக்குமார சாமி  தற்கொலை வழக்கில் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தூக்கியடித்தார்கள் . இன்னும் யாருக்கும் நியாயம் கிடைத்த பாடில்லை . 3. தமிழகத்தில் கடன் சுமை மிகவும் அதிகமானதாக அறிக்கைகள் பறந்தன. 4.இந்த ஆண்டும் அதிகாரி சகாயம் தான் மக்களின் ஹீரோ , வில்லன் வேறு யார் ,தமிழக அரசு தான். அரசு இயந்திரம் படுத்திய பாட்டில் மனிதர் இரவில் குவாரியில் உறங்கி கிரானைட் வழக்கின்  தடயங்களை காப்பாற்றினார். 5. காணாமல் போனவர்கள் பட்டியலில் ராகுல் காந்தியின் பெயரை ஆளாளுக்கு வாசித்தார்கள், வருடம் முழுதும் அரசியல் செய்த களைப்பை !!? போக்கிக்கொள்ள மறுபடியும் புத்தாண