கால்கள் நகர்ந்து செல்கிறேன் நீர்வழிப் புணைபோல்... , காற்றில் சிறகாய் கடந்து செல்கிறேன்... பறந்து, பறந்து மேலே உயரே நீளும் வானில் ... கடுவன் பாயும் கானில் நத்தையும் கூட நகரும், வலசைப் பறவை பகிரும் வாழ்வின் சாரம் இது காண் ... ஆட்டின் ரோமம் தொற்றி நிலம் தேடிச்செல்லும் விதையும், சிற்றில் நற்றூண் பற்றி நம் பாட்டி சொன்ன கதையும், பயணி ஆனதால் வாழ்கிறது வாழ்ந்து பயணித்து மீள்கிறது நடந்த நதியின் மடியில் - கடல் கடந்த கலங்கள் முதுகில் பிறந்து வளர்ந்த நாகரிகம, பாகியானின் பையில் படர்ந்து சென்ற சமயம், யாவும் சொல்வது, கடிகார முள்ளேறி காலம் சொல்வது பெயர்ச்சி கல் , பெயர்ச்சி கொள் ! நகர்ந்து செல்கிறேன் நீர்வழிப் புணைபோல் , காற்றில் சிறகாய் கடந்து செல்கிறேன் பறந்து, பறந்து மேலே உயரே.........!