Skip to main content

அப்துல் கலாம் - அஞ்சலி - நினைவின் மலர்கள்

அப்துல் கலாம் - அஞ்சலி - நினைவின் மலர்கள்   


அந்த மனிதரைப் பற்றி பதிவிட இரண்டு நாட்களாகி விட்டது. ஆற்றாமையும் நிலைஇல்லா சிந்தனைகளுமே மனதை அழுத்தி விடுகின்றன.

ஏவுகணை மனிதர் என்று அவரை ஊடகங்கள் விளிக்கின்றன,  அவரோ எளிமையின் மனிதராகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

அவர் பிறருக்கு அறிவுறுத்தியதும்  அவரது வாழ்க்கையும் வேறு வேறு அல்ல. ஒன்றே .

என் தலைமுறைக்கு  அவர் ஒரு ஊக்கமிகுந்த வழிகாட்டி , முன்மாதிரி !

அவர்போல் இன்னொரு அரசியல் சார்பற்ற தலைவர், இந்தியர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுவது என்பது நடக்கப்போவதே இல்லை.

அவரது எந்த இயல்பும் போற்றுதலுக்கு உரியதாகவே இருந்தது ,
 எதைச்சொல்ல !

 அவர்  ஐ ஐ டி மாணவனுக்கும் , ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கும் வகுப்பெடுத்தவர், அவர்தம் கேள்விகளுக்காக எப்போதும் செவி கொடுத்தவர்.

முதுமைக்காலத்திலும் தன ஆசிரியரின் முன் இருக்கையில் பொருந்தி அமராதவர்.

ஆக்கப்பூர்வமான அறிவியலின் முகவரி அவர். ஏவுகணையையும் வடிவமைத்துள்ளார்  , மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கைக்காலையும் வடிவமைத்துள்ளார்.

செல்லுமிடமெங்கும் தன் மொழியின் தகைமையை , அறத்தை , ஆக்கங்களை குறள் வழி மொழிந்தவர்.

மதச்சார்பின்மை, மனிதநேயம், நேர்மை, எளிமை, அறிவியல் , லட்சியங்களுக்கான கனவுகள் என அவர் தூவிச்சென்ற விதைகள் இந்தியாவெங்கும் முளைத்திருக்கின்றன.

கல்வியாளர்களும், தொழின்முறை ஆசிரியர்களும் கூட மாற்றத்தின் மீது நம்பிக்கை இழந்த வேளையிலும், கலாமுக்கு மாணவர்களிடத்தும் , இளைஞ ர்களிடத்தும், இந்திய இறையாண்மையிலும், கற்பித்தலிலும் ஒருபோதும் நம்பிக்கை குறைந்ததே இல்லை.

அவர் வலிமையான இந்தியா , நேர்மையான இந்தியா, தூய்மையான இந்தியா
யாவும் வருங்கால இளைஞர்களின் கைகளில் உள்ளது என உணர்ந்து கொண்டவர்.அதை அவர்களுக்கு உணர்த்தி விடவே இறுதி மூச்சு வரை உழைத்தவர்.

அவர் 2020-ல் மீண்டும் இந்தியாவை ஆய்வு செய்து , அதன் எட்டி விட்ட இலக்குகளையும் எட்ட வேண்டிய தொலைவுகளுக்கான திட்டங்களையும் வகுத்தளிப்பார் என பேராவல் கொண்டிருந்தேன். இயற்கை முந்திக்கொண்டது !

அனைத்துக்கும் நன்றி அய்யா ! அமைதியின் நிழலில் துயில்வீராக !

   விழித்திருந்த  அனைவரிடமும் நீங்கள் கனவுகளை விதைத்திருந்தீர்கள்,
   உங்கள் கனவுகளை மெய்ப்படச்செய்வதே இனி எங்கள் பணி!



    

Comments

Popular posts from this blog

மீண்டும் சிறுபாணன்

 சிறுபாணாற்றுப்படை   குறித்த சிறுபதிவு ஒன்றை இட்டிருந்தேன். https://thamilpanan.blogspot.com/2019/06/blog-post_13.html  சில மாதங்கள் கழித்து எழுத்தாளர் விழுப்புரம் கோ.செங்குட்டுவன்  விரிவான பதிவு ஒன்றை முகநூலில் இட்டிருந்தார். அதை எனது கட்டுரையின் தேடல்களை எல்லாம் ஆற்றுப்படுத்துவதாகக் கண்டதால் இங்கு பதிவிடுகிறேன். தாமரைக்கண்ணன், புதுச்சேரி. 31.07.2019  ======================= எயிற்பட்டினம் என்னும் மரக்காணம்: ஆழ்கடலில் மூழ்கிய சங்ககாலத் துறைமுகத்தில் கடல்சார் ஆய்வுகள் - முத்துசாமி இரா.  மரக்காணம் (English: Marakkanam), விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம் பேரூராட்சியில் அமைந்திருந்த துறைமுகமும் நகர்ப்புற மையமுமாகும் (Seaport and Urban Center) (பின்கோடு 604303).  இந்நகரம் பண்டைக் காலத்திலிருந்து எயிற்பட்டினம் (Eyirpattinam), சோபட்டினம் (Sopattinam), சோபட்மா (Sopatma), மனக்கானம் (Manakkanam), போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. “மதிலொடு பெயரியப் பட்டினம்” என்று சிறுபாணாற்றுப்படை சுட்டும் இந்தச் சங...

பொய்

நம் நண்பர் தான் அவர். கொஞ்சம் பழைய புத்தகம், சிலை, பனை சுவடி இதெல்லாம் சேகரிப்பார். பொருள்களின் உண்மையான மதிப்பு தெரிந்தவர் . நான் கொடுத்த தாளின் அடிப்பகுதியில் இருந்த கையெழுத்தையே பார்த்தார். பின் அதை அருகிலிருந்த பூதக்கண்ணாடியை எடுத்து அதன் வழியேயும் பார்த்தார்.பின் நிமிர்ந்து என்னைப்பார்த்து உதடு பிதுக்கினார்,  'ஒண்ணும் இல்லை ' 'கொஞ்சம் நல்லா ....' 'பார்த்துட்டேன் சார், நீங்க நினைக்குராப்ல எல்லாம் இல்ல ' ச்சே, பெருத்த ஏமாற்றம். காலையில் பேங்க்கிலும், அடகுக்கடையிலும் கூட இதே தான் சொன்னார்கள். நேற்று மேலாளரிடம் ஒரு தாளை நீட்டினேன் , வழக்கமான தாமதம் தான் . அதற்கு மனிதருக்கு அருள் வந்துவிட்டது ,  " என்ன, காலம் தாழ்த்தி நான்  கையேழுத்திடவா ? அதன் மதிப்பு தெரியுமா உனக்கு ? "                           உக்கும்  ,                           மனிதர் பொய் சொல்லியிர...

திருவிழா .......

நண்பனின் ஊர்த்திருவிழாவிற்கு போயிருந்தேன் . புதுக்கோட்டை அருகே கீரமங்கலம் எனும் ஊர் . மாற்றங்கள்  இருந்தாலும் கிராமம் இன்னும் கிராமமாகவே இருக்கிறது. எனது திருவிழா, காலையிலே துவங்கி விட்டது, குளத்தின் கரைகளின் வெப்பலில் பல பறவைகளும் பட்டாம்பூச்சிகளும் சுற்றி வந்தன . பெய்த மழை அந்தப்பெருங்குளத்தில் சிறிதே தேங்கி இருந்தது .  நீர் ஆங்காங்கே ஓடைகளாக ஓடி கால் நனைத்துக் கொண்டிருந்தது. வெயில் வெறும் வெளிச்சமாகவே இருந்தது , கண்ணுக்குத்தெரியாத குளுமை எங்களை சூழ்ந்திருந்தது .   வெப்பல் கரைகளில் நிறைய சிறு குருவிகளைப் பார்க்க முடிந்தது , ஆனால் அவை சிட்டுக்குருவிகள் அன்று.  வேகமாகவும் குழுவாக விதவிதமான வடிவங்களிலும் பறக்கும் தி க்ரூட்ஸ் படத்தில் வரும் குருவிகள் போலிருந்தன அவை. இரவு மாரியம்மன் கோவில் திருவிழாவில் 'ஆடலும் பாடலும் ' நடந்தது. மாரி அலங்காரியாக, பூக்களும் பட்டும் பரிவட்டமும்  சூடி சிங்கத்தின் மீதிருந்தாள். விழா மேடையில் நிலாக்காயுது ஓடிக்கொண்டிருந்தது, உச்சகட்டமாக  ஒரு பெண்ணை தூக்கிக்கட்டி அணைத...