Skip to main content

நான் ஏன் எழுதுகிறேன்?


நான் ஏன் எழுதுகிறேன்?


சின்ன வயதில் இருந்தே எனக்கு பல நிறைவேறாத லட்சியங்கள் உண்டு .
அஞ்சாங்ளாஸ் காலத்திலிருந்தே வீட்டில் ஒப்புமை காட்டியே ஓயாமல் திட்டிக்கொண்டிருப்பார்கள். நாமளும் ஏதாவது பண்ணுவோம் , என்ற நப்பாசையில் விஷப்பரீட்சைகளில் இறங்கி கை நிறைய மொக்கை வாங்கியதுண்டு . 

வீட்டில் உள்ளவர்கள் மனம் திருந்தி பாஸ் மார்க் மட்டுமாவது எடு ராசா என்று கெஞ்ச ஆரம்பித்த  போதும் , நான் விடுவதாக இல்லை . 
நண்பர்கள் எல்லாம் அதற்கேற்ப , ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு அடைமொழியோடு திரிந்து கொண்டிருந்தான் , கராத்தே சதீஷ் நிறைய்ய கலர் பெல்ட்டுகளை வாங்கி வைத்திருந்தான் .ஞாயிற்றுக்கிழமைகளில் ஆள் காணாமல் போய்விடுவான் . “எங்க மாஸ்டர் நாங்க எக்ஸர்சைஸ் பண்ணும்பொது எங்க வயித்தில ஏறி நடந்து போவார் தெரியுமா “ என்று அவன் (உதார் விடுவதற்காக சொன்னானோ , உண்மையாக சொன்னானோ ) சொன்ன போதே வயிறு கலங்கியது .
முனிபாபு படிப்பாளி , பார்த்திபன் என்.சி.சி  என எல்லோருக்கும் தனி அடையாளங்கள் இருந்தது . சின்ன வயதில் இருந்தே விளையாட்டு மைதானங்கள் என்றால் எனக்கு ஒவ்வாமை, எப்பொழுதும் ஓடுவதில் கடைசியாகத்தான் வருவேன் என்பதை வாட்ச்மேன் கூட தெரிந்து வைத்திருந்தார். 

பாடலாம் என்ற நப்பாசையை அருள் ஜான்சன் ஆசிட் ஊற்றி அழித்தான் , “வீணையடி நீ எனக்கு” மட்டுமே பாடி பத்தாவது வரை பரிசு வாங்கினான் . அதில் வரும் கண்ணம்மா என்ற ஹை பிட்ச்சை பாடியே தீருவேன் என்ற என் விடா முயற்சியின் பலனாக , குடியிருந்த வாடகை வீட்டை மாற்ற வேண்டியிருந்தது .  

பெரும்பாலும் என் முயற்சிகள் மற்றவர்களை பார்த்து சூடு போட்டுக் கொள்வதாகவே அமைந்திருந்தன . நான் ஒவ்வொரு விஷயத்தையும் முழுதாகக் கற்றுக்கொள்வதற்குப் பதிலாக , அதன் பலனை ,அதன் மூலம் கிடைக்கும் பெருமையை மட்டுமே கற்பனை செய்து கொண்டிருந்தேன் . 

விளைவு நான் பெரும்பாலும் விஷயங்களை போலியாக செய்து கொண்டிருந்தேன் , எனக்கான தனித்தன்மையை தேடாது நான் மிகையாக பாவனை செய்கிறேன் என்பதே பத்தாவதை தாண்டித்தான் எனக்கு உறைத்தது .அந்த உண்மை மிகவும் வலித்தது , அனால் எனக்கே தெரியாமல் உருப்படியான ஒரு காரியத்தை நான் செய்ய ஆரம்பித்திருந்தேன் , அது வாசிப்பு . 
எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை கிட்டத்தட்ட ஒரு கர்ப்பத்தை போலே பல வருடங்களாக சுமந்து கொண்டிருக்கிறேன் , ஒவ்வொரு முறையும் எதோ ஒரு குறை என் கண்ணில் படும் , இதை மட்டுமாவது உண்மையாக , பிறரின் சாயல்களின்றி துவங்கும் எண்ணம் மட்டுமே ஊசலாடிக்கொண்டிருந்தது  .

என் வாழ்நாளின் சாதனையாக ஒரு வலைப்பூ ஆரம்பிக்க வேண்டும் என கடந்த  பல வருடங்களாக முயற்சித்து , பல சோதனைகளை தாண்டி என் பதிவுகளை இந்த சுபயோக சுபதினத்தில் துவங்குகிறேன் . 

      ( மார்ச் 2012 -ல் எழுதியது )


Comments

  1. வரிகள் ஒவ்வொன்றும் வலிகள்....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மரபுப் பயணம்

புதுவையின் நுழைவாயிலான மதகடிப்பட்டு கடந்த ஞாயிறு (1.4.18) அன்று தமிழகத்தின் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த சரித்திர ஆர்வலர்களை வரவேற்கும் இடமாக ஆகியிருந்தது. சோழர் வரலாற்று ஆய்வு சங்கம் ஒருங்கிணைத்திருந்த மரபுநடை அங்கிருந்துதான் துவங்கியது. புதுவை கடலூர் விழுப்புரம் அன்பர்கள் அன்றியும் சேலம் பெரம்பலூர் வேலூர் நண்பர்களும் சென்னைவாசிகளாக மாறிவிட்ட பல்லூர்க்காரர்களும் குழுமியிருந்தனர்.  ஜெயங்கொண்ட சோழமண்டலம், திரிபுவனமாதேவி சதுர்வேதிமங்கலத்தின் ஒருபகுதியான குந்தாங்குழி மகாதேவர் கோவிலில் இருந்து துவங்கினோம். பூவுதிரும் அசோக மரத்தடியில் இருந்து எழுபதே வயதேயான பேரிளைஞரான திரு வீரராகவன் எங்கள் கைபற்றி சோழர் காலத்துக்குள் கூட்டிச்சென்றார். சோழர்கால கோவில்கள், கல்வெட்டுகளில் குறிக்கப்பட்ட நிவந்தங்கள், நிவந்தங்களின் வகைகள், சோழர் கல்வெட்டுக்கும், பல்லவர் கல்வெட்டுக்குமான துவக்க வரிகள் என கடைசியிருக்கை எம்மனோர்க்கு எளிதில் விளங்காதவற்றை எளிமையாக விளக்கி  சொன்னார். அவரது பேச்சு கொண்டுசெல்லும் வழியெங்கும் நிரம்பி உதிரும் பூக்கூடை போல இருந்தது, அவரிடமிருந்து வரலாற்றுத்தகவல்கள் வந்து விழுந்து

மீண்டும் சிறுபாணன்

 சிறுபாணாற்றுப்படை   குறித்த சிறுபதிவு ஒன்றை இட்டிருந்தேன். https://thamilpanan.blogspot.com/2019/06/blog-post_13.html  சில மாதங்கள் கழித்து எழுத்தாளர் விழுப்புரம் கோ.செங்குட்டுவன்  விரிவான பதிவு ஒன்றை முகநூலில் இட்டிருந்தார். அதை எனது கட்டுரையின் தேடல்களை எல்லாம் ஆற்றுப்படுத்துவதாகக் கண்டதால் இங்கு பதிவிடுகிறேன். தாமரைக்கண்ணன், புதுச்சேரி. 31.07.2019  ======================= எயிற்பட்டினம் என்னும் மரக்காணம்: ஆழ்கடலில் மூழ்கிய சங்ககாலத் துறைமுகத்தில் கடல்சார் ஆய்வுகள் - முத்துசாமி இரா.  மரக்காணம் (English: Marakkanam), விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம் பேரூராட்சியில் அமைந்திருந்த துறைமுகமும் நகர்ப்புற மையமுமாகும் (Seaport and Urban Center) (பின்கோடு 604303).  இந்நகரம் பண்டைக் காலத்திலிருந்து எயிற்பட்டினம் (Eyirpattinam), சோபட்டினம் (Sopattinam), சோபட்மா (Sopatma), மனக்கானம் (Manakkanam), போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. “மதிலொடு பெயரியப் பட்டினம்” என்று சிறுபாணாற்றுப்படை சுட்டும் இந்தச் சங்ககாலத் துறைமுகப் பட்டணம் பாலாறு

சங்கப்பாடல்கள் வாசிப்பு - நற்றிணை 1

சங்கப்பாடல்கள் வாசிப்பு என்பது எனக்கு நான் விடுத்துக்கொள்ளும் பெரிய சவால், ஒவ்வொரு பாடலின் நயம் உணர்ந்து படித்து அதை தொகுத்துக்கொள்வது என்பது குறுகிய நேரத்தில் அடையப்படுவதல்ல, விரைவு எனும் சொல்லை இங்கு கைக்கொண்டால் அதன் அழகை முழுதும் அறிய முயலாமையாகப் போய்விடும், வாசிப்பு மனம் அதை பற்றிக்கொள்ளவேண்டும், எனவே தினம் ஒரு பாடல் அல்லது இரு பாடல்கள் மட்டும் என வரையறை செய்த்து கொள்கிறேன். நற்றிணை எட்டுத்தொகை நூல்களுள் முதலில் வைக்கப்படுவது, அகத்துறையைச்சார்ந்த நானூறு பாக்களால் ஆனது, ஐந்திணைகளிலும் பாடல்கள் உள்ளன. 1915 ல் பின்னத்தூர் நாராயணசாமி அய்யரால் முதலில் பதிப்பிக்கப்பட்டது. முதல்பாடல் குறிஞ்சித்திணை சார்ந்தது நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர் என்றும் என் தோள் பிரிபு அறியலரே தாமரை தண் தாது ஊதி மீமிசை சாந்தில் தொடுத்த தீம் தேன் போல புரைய மன்ற புரையோர் கேண்மை நீர் இன்று அமையா உலகம் போல தம் இன்று அமையா நம் நயந்து அருளி நறு நுதல் பசத்தல் அஞ்சி சிறுமை உறுபவோ செய்பு அறியலரே இது பிரிவு உணர்த்திய தோழிக்கு தலைவி சொல்லியது. நான் விரும்பும் ஆண், சொன்ன சொல் தவறாதவன், நீண்ட காலமாகப் பழகுவதற்கு இனி