Skip to main content

பி பி திரும்பி பார்த்தல் 2.0 - 2015

                                                    பி பி திரும்பி பார்த்தல் 2.0  - 2015

26. முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டார் என்ற தகவல்கள் வெளியாகின, எதிர்க்கட்சிகள் உண்மை நிலவரம் கேட்க, கலாம் நினைவஞ்சலிக்கு உடல்நலமின்மையால் வர முடியவில்லை என முதல்வரே சொல்ல நேர்ந்தது .

27. ஸ்டியரிங்கை பிடித்த கையோடு கேமெராவை தூக்கினார் அஜித். அப்புக்குட்டி , ஸ்ருதி என க்ளிக்கித்தள்ளினார்.

28. விவசாயிகள் தற்கொலைகளை மத்திய அரசு கொச்சைப்படுத்தியது  .
   
29. தருமபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தொடர்         மரணமடைய , அப்படி ஒன்று நடக்கவே இல்லை என சாதித்தது அரசு.

30.  பருப்பு விலை ஜெட் ஏறியது, துவரம்பருப்பை துயரம் பருப்பு என பேர்மாற்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டன . காய்கறி விலையும்   உயர , சிக்கன் சாப்பிட்டு காலமோட்டினான் தமிழன்.

31. படேல் சமுதாயத்தினர் இடஒதுக்கீட்டுக்கு போராட, காந்தி பூமியில் கலவரம் வெடித்தது. கலவரத்தை தூண்டி கடைசியில் பலான வீடியோவில் மாட்டி காமெடி பீஸானார்  ஹர்த்திக் படேல்.

32. தமிழக காய்கறிகளில் பூச்சி மருந்து அதிகம் இருப்பதாக லாரிகளை மறித்து கட்டை கட்டியது கேரள அரசு, தமிழக அமைச்சர் ஆய்வு, அறிக்கை என , வாங்க.... பேசுவோம்...... ஸ்டைலில் பதிலளிக்க, அவர்களே டயர்டாகி கட்டையை கழற்றினார்கள் .

33. தமிழ்நாட்டில் முதல்வர் சீட்டுக்கு பல பேர் கர்ச்சீப் போட, பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஓட்டினார் அன்புமணி. வரிசையாக 4 போஸ்டர் ஒட்டியவுடன் சைக்கிள் பஞ்சரானது , போஸ்டரும் நின்று போனது.

34. உலக முதலீட்டாளர்கள் மாநாடு  இந்த ஆண்டு உலகத்தர காமெடி.
     இவ்வளவு முதலீடு வரும் என தமிழக அமைச்சர்கள் கணக்கை அடிச்சு உட  ,  உலகமெல்லாஞ்சுத்தியும்  இம்புட்டு நம்மாளயே  முடியலயே என முழி பிதுங்கினர்  மோடி பாய்ஸ்.

35. பிரித்திகா யாஷினி , குணவதி என திருநங்கைகள்  அரசு பணிகளில் அமர,
     அவர்கள் மீதான பார்வையில் மரியாதை அதிகரித்தது.

36. சாதியக்கொலையில் கோகுல்ராஜ் என்ற இளைஞர் பலியாக அதை விசாரித்த காவல்துறை அதிகாரி விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்டார் .

37. இந்தியாவிலேயே வாட்ஸ் ஆப்பில் தேதி குறித்து சரண்டரான பெருமைக்கு சொந்தக்காரரானார் யுவராஜ். தமிழக போலீஸ் ஸ்காட்லாந்து யார்டு என்று ஒரு காலத்தில்,' சும்மா பேசிக்கிட்டாங்க மாமா' ....

38. உள்ளாட்சி தேர்தல்களையெல்லாம்  ச்சும்மா லெப்ட்டில் அடித்தது நடிகர் சங்க தேர்தல். பாண்டவர் அணி வெல்ல, சொம்பை தூக்கி உள்ள வைத்தார் நாட்டாமை.

39. டாஸ்மார்க்கை மூடச்சொல்லி பாடிய பாடகர் கோவனை நள்ளிரவில் கைது செய்தது தமிழ்நாடு போலீஸ்.

40. உள்நாட்டு போர்களாலும் , ஐ எஸ்  தீவிரவாதத்தாலும் உலகெங்கும் சிரியா அகதிகள் தஞ்சமடைந்தனர்.

41. வருடம்  முழுக்க வாயால் சர்ச்சை களி கிண்டினார்  இ வி கே எஸ் இளங்கோவன் . அம்மாவை வம்புக்கு இழுக்க , கொடும்பாவி செய்பவர்களது டிமாண்ட் எகிறியது . நிற்காது நக்மா , தமிழிசை என வம்பிழுத்தவர் விஜயதாரணியிடம் வருஷக்கடைசியில் ஒரண்டை  இழுத்தார் .

42. இலங்கையில்  போர்க்குற்ற சர்வதேச விசாரணை தேவையில்லை என அந்தர் பல்டி அடித்தது அமேரிக்கா .

43.சவுதியில் வேலை செய்யப்போய் கையை இழந்து வந்தார் தமிழ்நாட்டின் கஸ்தூரி. மனிதர்கள் மீது மனிதர்கள் இவ்வளவு வெறுப்புணர்ச்சி கொள்ளமுடியுமா என்ன ? சவுதியில்  பிறக்க வேணும் பத்து பெரியார்...

44. தீபாவளி கொண்டாட ஊருக்கு வந்தவர்களை வீட்டுக்குள் வைத்து பூட்டியது மழை.

45. "இது ச்சும்மா டிரைலர் தாம்மா" என பின்னால் வந்தது பெருமழை, சென்னை கண்ணீர்த் தீவாகியது. கடலூர் மீண்டும் மீண்டும் சிதைந்தது.

46.  செம்பரம்பாக்கம் ஏரியை சரியான நேரத்தில் திறக்காதது தான் வெள்ளத்துக்கு காரணம் என எதிக்கட்சிகள் கேள்வி எழுப்பின. இன்று வரை அரசிடமிருந்தது முறையான பதில் இல்லை.

47. வருடம் முழுக்க வாட்ஸ் ஆப்பில் லஞ்ச , கிளுகிளுப்பு வாய்ஸ் ஓவர் கேட்டுக்கொண்டிருந்தான் தமிழன். இன்னைக்கு என்ன ஆடியோ ரிலீஸ் ஆகப்போகுதோ என எதிர்பார்த்திருக்க, தமிழக முதல்வரே மக்களிடம் தழுதழுத்தார்.

48.  சக மனிதனுக்கு மனிதன்  உதவிய  நேரத்திலும் யார் யாரோ கொடுத்த நிவாரண பொருள்களில் ஸ்டிக்கர் ஒட்டி விசுவாசம் காட்டினர் ஆளுங்கட்சியினர். எங்க தான் ஓட்டுவது என்ற விவஸ்தை இல்லாமல் சிலர் நிவாரணத்துக்கு வந்த "ஆடை"களிலும் ஒட்டி வைக்க, கொத்தாக அள்ளியது போலீஸ் .

49. வருஷக்கடைசியில் பீப் பாடல் வெளிவந்தது, நேரடியாக சிங்கிள் மீனிங்கில் பீப் போட்டதற்கு இளவட்டங்களே  திட்டத்துவங்கினார் . தலைமறைவானார்கள் சிம்புவும் அநிருத்தும் .

50. பத்திரிக்கையாளர்களை திட்டியதோடு காரியும் துப்பினார் விஜயகாந்தூ.
     ஆச்சரியமாக, ஊடக நடுநிலைமையை கெட்ட கேள்வி கேட்டு , கேப்டனை ஆதரித்தனர் நெட்டிசன்ஸ்.





Comments

Popular posts from this blog

மீண்டும் சிறுபாணன்

 சிறுபாணாற்றுப்படை   குறித்த சிறுபதிவு ஒன்றை இட்டிருந்தேன். https://thamilpanan.blogspot.com/2019/06/blog-post_13.html  சில மாதங்கள் கழித்து எழுத்தாளர் விழுப்புரம் கோ.செங்குட்டுவன்  விரிவான பதிவு ஒன்றை முகநூலில் இட்டிருந்தார். அதை எனது கட்டுரையின் தேடல்களை எல்லாம் ஆற்றுப்படுத்துவதாகக் கண்டதால் இங்கு பதிவிடுகிறேன். தாமரைக்கண்ணன், புதுச்சேரி. 31.07.2019  ======================= எயிற்பட்டினம் என்னும் மரக்காணம்: ஆழ்கடலில் மூழ்கிய சங்ககாலத் துறைமுகத்தில் கடல்சார் ஆய்வுகள் - முத்துசாமி இரா.  மரக்காணம் (English: Marakkanam), விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம் பேரூராட்சியில் அமைந்திருந்த துறைமுகமும் நகர்ப்புற மையமுமாகும் (Seaport and Urban Center) (பின்கோடு 604303).  இந்நகரம் பண்டைக் காலத்திலிருந்து எயிற்பட்டினம் (Eyirpattinam), சோபட்டினம் (Sopattinam), சோபட்மா (Sopatma), மனக்கானம் (Manakkanam), போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. “மதிலொடு பெயரியப் பட்டினம்” என்று சிறுபாணாற்றுப்படை சுட்டும் இந்தச் சங...

பொய்

நம் நண்பர் தான் அவர். கொஞ்சம் பழைய புத்தகம், சிலை, பனை சுவடி இதெல்லாம் சேகரிப்பார். பொருள்களின் உண்மையான மதிப்பு தெரிந்தவர் . நான் கொடுத்த தாளின் அடிப்பகுதியில் இருந்த கையெழுத்தையே பார்த்தார். பின் அதை அருகிலிருந்த பூதக்கண்ணாடியை எடுத்து அதன் வழியேயும் பார்த்தார்.பின் நிமிர்ந்து என்னைப்பார்த்து உதடு பிதுக்கினார்,  'ஒண்ணும் இல்லை ' 'கொஞ்சம் நல்லா ....' 'பார்த்துட்டேன் சார், நீங்க நினைக்குராப்ல எல்லாம் இல்ல ' ச்சே, பெருத்த ஏமாற்றம். காலையில் பேங்க்கிலும், அடகுக்கடையிலும் கூட இதே தான் சொன்னார்கள். நேற்று மேலாளரிடம் ஒரு தாளை நீட்டினேன் , வழக்கமான தாமதம் தான் . அதற்கு மனிதருக்கு அருள் வந்துவிட்டது ,  " என்ன, காலம் தாழ்த்தி நான்  கையேழுத்திடவா ? அதன் மதிப்பு தெரியுமா உனக்கு ? "                           உக்கும்  ,                           மனிதர் பொய் சொல்லியிர...

திருவிழா .......

நண்பனின் ஊர்த்திருவிழாவிற்கு போயிருந்தேன் . புதுக்கோட்டை அருகே கீரமங்கலம் எனும் ஊர் . மாற்றங்கள்  இருந்தாலும் கிராமம் இன்னும் கிராமமாகவே இருக்கிறது. எனது திருவிழா, காலையிலே துவங்கி விட்டது, குளத்தின் கரைகளின் வெப்பலில் பல பறவைகளும் பட்டாம்பூச்சிகளும் சுற்றி வந்தன . பெய்த மழை அந்தப்பெருங்குளத்தில் சிறிதே தேங்கி இருந்தது .  நீர் ஆங்காங்கே ஓடைகளாக ஓடி கால் நனைத்துக் கொண்டிருந்தது. வெயில் வெறும் வெளிச்சமாகவே இருந்தது , கண்ணுக்குத்தெரியாத குளுமை எங்களை சூழ்ந்திருந்தது .   வெப்பல் கரைகளில் நிறைய சிறு குருவிகளைப் பார்க்க முடிந்தது , ஆனால் அவை சிட்டுக்குருவிகள் அன்று.  வேகமாகவும் குழுவாக விதவிதமான வடிவங்களிலும் பறக்கும் தி க்ரூட்ஸ் படத்தில் வரும் குருவிகள் போலிருந்தன அவை. இரவு மாரியம்மன் கோவில் திருவிழாவில் 'ஆடலும் பாடலும் ' நடந்தது. மாரி அலங்காரியாக, பூக்களும் பட்டும் பரிவட்டமும்  சூடி சிங்கத்தின் மீதிருந்தாள். விழா மேடையில் நிலாக்காயுது ஓடிக்கொண்டிருந்தது, உச்சகட்டமாக  ஒரு பெண்ணை தூக்கிக்கட்டி அணைத...