Skip to main content

பி பி திரும்பி பார்த்தல் 2.0 - 2015

                                                    பி பி திரும்பி பார்த்தல் 2.0  - 2015

26. முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டார் என்ற தகவல்கள் வெளியாகின, எதிர்க்கட்சிகள் உண்மை நிலவரம் கேட்க, கலாம் நினைவஞ்சலிக்கு உடல்நலமின்மையால் வர முடியவில்லை என முதல்வரே சொல்ல நேர்ந்தது .

27. ஸ்டியரிங்கை பிடித்த கையோடு கேமெராவை தூக்கினார் அஜித். அப்புக்குட்டி , ஸ்ருதி என க்ளிக்கித்தள்ளினார்.

28. விவசாயிகள் தற்கொலைகளை மத்திய அரசு கொச்சைப்படுத்தியது  .
   
29. தருமபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தொடர்         மரணமடைய , அப்படி ஒன்று நடக்கவே இல்லை என சாதித்தது அரசு.

30.  பருப்பு விலை ஜெட் ஏறியது, துவரம்பருப்பை துயரம் பருப்பு என பேர்மாற்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டன . காய்கறி விலையும்   உயர , சிக்கன் சாப்பிட்டு காலமோட்டினான் தமிழன்.

31. படேல் சமுதாயத்தினர் இடஒதுக்கீட்டுக்கு போராட, காந்தி பூமியில் கலவரம் வெடித்தது. கலவரத்தை தூண்டி கடைசியில் பலான வீடியோவில் மாட்டி காமெடி பீஸானார்  ஹர்த்திக் படேல்.

32. தமிழக காய்கறிகளில் பூச்சி மருந்து அதிகம் இருப்பதாக லாரிகளை மறித்து கட்டை கட்டியது கேரள அரசு, தமிழக அமைச்சர் ஆய்வு, அறிக்கை என , வாங்க.... பேசுவோம்...... ஸ்டைலில் பதிலளிக்க, அவர்களே டயர்டாகி கட்டையை கழற்றினார்கள் .

33. தமிழ்நாட்டில் முதல்வர் சீட்டுக்கு பல பேர் கர்ச்சீப் போட, பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஓட்டினார் அன்புமணி. வரிசையாக 4 போஸ்டர் ஒட்டியவுடன் சைக்கிள் பஞ்சரானது , போஸ்டரும் நின்று போனது.

34. உலக முதலீட்டாளர்கள் மாநாடு  இந்த ஆண்டு உலகத்தர காமெடி.
     இவ்வளவு முதலீடு வரும் என தமிழக அமைச்சர்கள் கணக்கை அடிச்சு உட  ,  உலகமெல்லாஞ்சுத்தியும்  இம்புட்டு நம்மாளயே  முடியலயே என முழி பிதுங்கினர்  மோடி பாய்ஸ்.

35. பிரித்திகா யாஷினி , குணவதி என திருநங்கைகள்  அரசு பணிகளில் அமர,
     அவர்கள் மீதான பார்வையில் மரியாதை அதிகரித்தது.

36. சாதியக்கொலையில் கோகுல்ராஜ் என்ற இளைஞர் பலியாக அதை விசாரித்த காவல்துறை அதிகாரி விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்டார் .

37. இந்தியாவிலேயே வாட்ஸ் ஆப்பில் தேதி குறித்து சரண்டரான பெருமைக்கு சொந்தக்காரரானார் யுவராஜ். தமிழக போலீஸ் ஸ்காட்லாந்து யார்டு என்று ஒரு காலத்தில்,' சும்மா பேசிக்கிட்டாங்க மாமா' ....

38. உள்ளாட்சி தேர்தல்களையெல்லாம்  ச்சும்மா லெப்ட்டில் அடித்தது நடிகர் சங்க தேர்தல். பாண்டவர் அணி வெல்ல, சொம்பை தூக்கி உள்ள வைத்தார் நாட்டாமை.

39. டாஸ்மார்க்கை மூடச்சொல்லி பாடிய பாடகர் கோவனை நள்ளிரவில் கைது செய்தது தமிழ்நாடு போலீஸ்.

40. உள்நாட்டு போர்களாலும் , ஐ எஸ்  தீவிரவாதத்தாலும் உலகெங்கும் சிரியா அகதிகள் தஞ்சமடைந்தனர்.

41. வருடம்  முழுக்க வாயால் சர்ச்சை களி கிண்டினார்  இ வி கே எஸ் இளங்கோவன் . அம்மாவை வம்புக்கு இழுக்க , கொடும்பாவி செய்பவர்களது டிமாண்ட் எகிறியது . நிற்காது நக்மா , தமிழிசை என வம்பிழுத்தவர் விஜயதாரணியிடம் வருஷக்கடைசியில் ஒரண்டை  இழுத்தார் .

42. இலங்கையில்  போர்க்குற்ற சர்வதேச விசாரணை தேவையில்லை என அந்தர் பல்டி அடித்தது அமேரிக்கா .

43.சவுதியில் வேலை செய்யப்போய் கையை இழந்து வந்தார் தமிழ்நாட்டின் கஸ்தூரி. மனிதர்கள் மீது மனிதர்கள் இவ்வளவு வெறுப்புணர்ச்சி கொள்ளமுடியுமா என்ன ? சவுதியில்  பிறக்க வேணும் பத்து பெரியார்...

44. தீபாவளி கொண்டாட ஊருக்கு வந்தவர்களை வீட்டுக்குள் வைத்து பூட்டியது மழை.

45. "இது ச்சும்மா டிரைலர் தாம்மா" என பின்னால் வந்தது பெருமழை, சென்னை கண்ணீர்த் தீவாகியது. கடலூர் மீண்டும் மீண்டும் சிதைந்தது.

46.  செம்பரம்பாக்கம் ஏரியை சரியான நேரத்தில் திறக்காதது தான் வெள்ளத்துக்கு காரணம் என எதிக்கட்சிகள் கேள்வி எழுப்பின. இன்று வரை அரசிடமிருந்தது முறையான பதில் இல்லை.

47. வருடம் முழுக்க வாட்ஸ் ஆப்பில் லஞ்ச , கிளுகிளுப்பு வாய்ஸ் ஓவர் கேட்டுக்கொண்டிருந்தான் தமிழன். இன்னைக்கு என்ன ஆடியோ ரிலீஸ் ஆகப்போகுதோ என எதிர்பார்த்திருக்க, தமிழக முதல்வரே மக்களிடம் தழுதழுத்தார்.

48.  சக மனிதனுக்கு மனிதன்  உதவிய  நேரத்திலும் யார் யாரோ கொடுத்த நிவாரண பொருள்களில் ஸ்டிக்கர் ஒட்டி விசுவாசம் காட்டினர் ஆளுங்கட்சியினர். எங்க தான் ஓட்டுவது என்ற விவஸ்தை இல்லாமல் சிலர் நிவாரணத்துக்கு வந்த "ஆடை"களிலும் ஒட்டி வைக்க, கொத்தாக அள்ளியது போலீஸ் .

49. வருஷக்கடைசியில் பீப் பாடல் வெளிவந்தது, நேரடியாக சிங்கிள் மீனிங்கில் பீப் போட்டதற்கு இளவட்டங்களே  திட்டத்துவங்கினார் . தலைமறைவானார்கள் சிம்புவும் அநிருத்தும் .

50. பத்திரிக்கையாளர்களை திட்டியதோடு காரியும் துப்பினார் விஜயகாந்தூ.
     ஆச்சரியமாக, ஊடக நடுநிலைமையை கெட்ட கேள்வி கேட்டு , கேப்டனை ஆதரித்தனர் நெட்டிசன்ஸ்.





Comments

Popular posts from this blog

வலியது

நிறுவனத்தில் மேலாளர் ஸ்ரீக்கு பதவி உயர்வோடு நீர்சூழ் தீவாந்திர சிட்சை அளித்திருக்கிறார்கள். அக்கணம் மணமருள் பெருமானை துதித்தபடி அனைத்தையும் கைவிட்டு விட்டு நீங்கிவிட்டார். ஒருவாரம் கழித்து பார்த்தேன், பின் அழகிய சிங்கர் ஒருவருக்கு பரிவட்டம் கட்ட வந்திருந்தார். நலமா என்றேன் ஆமாம் என்று உதடடைந்ததும், காற்று தான் வருகிறது. இருவருடம் முன்புவரை துரத்தித்துரத்தி இவரை அவம் செய்த முதுகிழ மேலாளரும் அதே தீவிற்கு டிக்கெட் எடுத்திருக்கிறார்.

அறிதுயில்

மற்றுமோர் மென் தூறல் ஞாயிற்றுப் பயணம். மணிமாறன், கடலூர் சீனு அண்ணா, திருமா அண்ணா நான் நால்வரும் எட்டு மணிக்கு மதகடிப்பட்டை தாண்டுகிறோம். சமீபத்தில் வீடு மாற்றி திருவாண்டார் கோவில் வந்துவிட்டேன். மணியும் சீனு அண்ணனும் வீட்டிற்கு இப்போதுதான் வருகிறார்கள் சீனு அண்ணனின் தாடிநீளத்தை பார்த்து கீழ்வீட்டு காளி மிரண்டு துள்ளி எனக்குப்பின்னால் ஒளிந்து கொண்டான். மாலை திரும்பும்போது போனில் சீனு மாமா என்று கொஞ்சிய கவினும் அதேபோல மிரண்டான். பயணம் செஞ்சியை மையமாகக்கொண்டு திட்டமிடப்பட்டது. வழிநெடுக சமணத் தடங்களை அறிவிக்கும் பலகைகள். விழுப்புரம் தாண்டும்போதுதான் முதலில் தளவானூர் செல்வதாக முடிவெடுத்தோம். நானும் தளவானூரை நேரடியாக பார்த்ததில்லை. மணிமாறனுடன் செய்யும் பயணங்களில் உணவு விஷயத்தில் நான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பேன் காலை உணவை ஆறுமணிக்கே வாங்கித்தந்துவிடுவான், மாலை ஆறுமணிக்கு. மாற்று சக்கரத்தில் காற்றில்லை என்று சாலப்பரிந்த புன்னகையோடு மணி சொல்லிக்கொண்டிருக்கும்போது செல்வழியில் ஒரு கடையில் நிறுத்தினோம், புகை கூரை மேலெழுந்து ஒரு கொடிபோல ஆடிக்கொண்டிருந்தது. எளிய சுவை மிகுந்த உணவு, நா...

ஜல்லிக்கட்டு பேரணி சென்னை

இன்று நடந்த ஜல்லிக்கட்டுக்கான பேரணி நிச்சயம் ஒரு பேரனுபவம் தான் . முதலில் இவ்வளவு கூட்டம் வரும் என்றே எதிர்பார்க்கவில்லை. கலங்கரை விளக்கில் சென்று வரிசையில் நின்றபோதே தன்னார்வலர்கள் வந்து பேரணி பற்றி விளக்கிவிட்டு என்ன செய்யவேண்டும் என்றும் சொன்னார்கள்.  அமைதியாக ஆரம்பித்த பேரணியில் முழக்கங்கள் தொடர்ந்து எழ ஆரம்பித்தது. பின் ஒரு ரிலே ரேஸ் போல முழக்கங்கள் முன்னிருந்து பின்னாக பற்றிக்கொள்ள ஆரம்பித்தது. அதிலும் எனக்குபின் நின்ற சகோதரிகள் பேரணி ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை முழக்கங்களை நிறுத்தவேயில்லை. “நடத்துவோண்டா ஜல்லிக்கட்டு தடையைத்தாண்டி துள்ளிக்கிட்டு” எல்லாம் அதில் ஒரு சோறு பதம்.  வந்திருந்தவர்களில் எண்பது சதத்திற்கும் மேல் இளையோர்கள். அதனாலேயே உற்சாகமும் உணர்வெழுச்சியும் அதிகமாக இருந்தது. வெவ்வேறு ஊர்க்காரர்கள், தானே பதாகைகள் தயாரித்து கொண்டுவந்திருந்தவர்கள், வேற்று மொழி சகோதரர்கள் , சில வெளிநாட்டுக்காரர்கள் கூட கலந்து கொண்டனர்.  கூட்டம் மெல்ல மெல்ல அதன் உச்ச கட்ட உணர்வெழுச்சிக்கு செல்கையிலே நடுவிலே வழி ஒதுக்கப்பட்டது,    அலங்கரிக்கப்பட்ட ஜல...