Skip to main content

ராஜவனம் - ராம் தங்கம்

ராஜவனம் - ராம் தங்கம்
திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்பு எழுதிய எழுத்தாளர் ராம் தங்கத்தின் அடுத்த படைப்பு ராஜவனம் என்னும் எழுபது பக்க அளவிலான குறுநாவல். நாவலின் சிறப்பு அதன் சொற்கச்சிதம், அதுதான் இந்த சிறிய நாவலில், ஒரு நிலத்தின் இயல்பு, சூழியல், அரசியல் அனைத்தையும் செறிவாகக் கொண்டுவர உதவியிருக்கிறது. இந்த வடிவத்தை தெரிவு செய்ததற்காக ஆசிரியரை தனியே பாராட்டவேண்டும். விவரிப்பினூடாக ஒரு வனத்தில் உங்களை புகுத்திவிடுவதுதான் நாவலின் அழகு, சங்கஇலக்கியத்தில் சிலபாடல்களில் இந்த மாயம் நிகழும் , நீங்கள் வார்த்தைகளூடே ஒரு பாலையிலோ, சுனைக்கரையிலோ நின்று கொண்டிருப்பீர்கள்...உள்ளே உறங்கும் ஏதோ ஒன்று வனத்தில் நம்மை அதிசுதந்திரர்களாக்கி விடுகிறது. எது நம்மை அங்கு பிணைத்திருக்கிறது என்பது அது அறியும்போலும். நாவலில் காடு ஒரு தகப்பனின் நினைவுகளூடே விரிகிறது, ஒரு மகனின் பயணத்தில் எதிர்பாராது வரும் வன்விலங்கு அவனுக்கு அவன் மேலும் அறிந்துகொள்ளத்தக்க ஒரு தகப்பனைக் காட்டிச்செல்லும். வனத்தின் புல்லையும், மூங்கிலையும், வண்ணத்துப்பூச்சியையும், பறவையையும் பெயரோடு சுட்டும் ராம் தங்கம், காணிகளின் அடுப்பு நீரில் கொதிக்கும் தழைகளையும் சொல்கிறார். தகவல் செறிவால் குமரி வனத்தின் காடுபற்றிய ஒரு அழகிய ஆவணமாகவும் இது அமைந்திருக்கிறது. புனைவும் தரவுகளும் பிணைந்த இந்த தன்மை படைப்பில் இயல்பாகவே பொருந்தியிருக்கிறது. காட்டின் மீது காதலுள்ள யாரும் வாசிக்கவேண்டிய நூல், அப்படி இல்லையெனில் வாசித்தபின் அந்த வனத்தை காதலிக்கத்துவங்குவீர்கள். குமரி மாவட்ட நந்தியாற்றின் பிறப்பிடத்தை நாமும் பார்த்து வரலாம், வாருங்கள். தாமரைக்கண்ணன் புதுச்சேரி 11.03.2021

Comments

Popular posts from this blog

வலியது

நிறுவனத்தில் மேலாளர் ஸ்ரீக்கு பதவி உயர்வோடு நீர்சூழ் தீவாந்திர சிட்சை அளித்திருக்கிறார்கள். அக்கணம் மணமருள் பெருமானை துதித்தபடி அனைத்தையும் கைவிட்டு விட்டு நீங்கிவிட்டார். ஒருவாரம் கழித்து பார்த்தேன், பின் அழகிய சிங்கர் ஒருவருக்கு பரிவட்டம் கட்ட வந்திருந்தார். நலமா என்றேன் ஆமாம் என்று உதடடைந்ததும், காற்று தான் வருகிறது. இருவருடம் முன்புவரை துரத்தித்துரத்தி இவரை அவம் செய்த முதுகிழ மேலாளரும் அதே தீவிற்கு டிக்கெட் எடுத்திருக்கிறார்.

அறிதுயில்

மற்றுமோர் மென் தூறல் ஞாயிற்றுப் பயணம். மணிமாறன், கடலூர் சீனு அண்ணா, திருமா அண்ணா நான் நால்வரும் எட்டு மணிக்கு மதகடிப்பட்டை தாண்டுகிறோம். சமீபத்தில் வீடு மாற்றி திருவாண்டார் கோவில் வந்துவிட்டேன். மணியும் சீனு அண்ணனும் வீட்டிற்கு இப்போதுதான் வருகிறார்கள் சீனு அண்ணனின் தாடிநீளத்தை பார்த்து கீழ்வீட்டு காளி மிரண்டு துள்ளி எனக்குப்பின்னால் ஒளிந்து கொண்டான். மாலை திரும்பும்போது போனில் சீனு மாமா என்று கொஞ்சிய கவினும் அதேபோல மிரண்டான். பயணம் செஞ்சியை மையமாகக்கொண்டு திட்டமிடப்பட்டது. வழிநெடுக சமணத் தடங்களை அறிவிக்கும் பலகைகள். விழுப்புரம் தாண்டும்போதுதான் முதலில் தளவானூர் செல்வதாக முடிவெடுத்தோம். நானும் தளவானூரை நேரடியாக பார்த்ததில்லை. மணிமாறனுடன் செய்யும் பயணங்களில் உணவு விஷயத்தில் நான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பேன் காலை உணவை ஆறுமணிக்கே வாங்கித்தந்துவிடுவான், மாலை ஆறுமணிக்கு. மாற்று சக்கரத்தில் காற்றில்லை என்று சாலப்பரிந்த புன்னகையோடு மணி சொல்லிக்கொண்டிருக்கும்போது செல்வழியில் ஒரு கடையில் நிறுத்தினோம், புகை கூரை மேலெழுந்து ஒரு கொடிபோல ஆடிக்கொண்டிருந்தது. எளிய சுவை மிகுந்த உணவு, நா...

ஜல்லிக்கட்டு பேரணி சென்னை

இன்று நடந்த ஜல்லிக்கட்டுக்கான பேரணி நிச்சயம் ஒரு பேரனுபவம் தான் . முதலில் இவ்வளவு கூட்டம் வரும் என்றே எதிர்பார்க்கவில்லை. கலங்கரை விளக்கில் சென்று வரிசையில் நின்றபோதே தன்னார்வலர்கள் வந்து பேரணி பற்றி விளக்கிவிட்டு என்ன செய்யவேண்டும் என்றும் சொன்னார்கள்.  அமைதியாக ஆரம்பித்த பேரணியில் முழக்கங்கள் தொடர்ந்து எழ ஆரம்பித்தது. பின் ஒரு ரிலே ரேஸ் போல முழக்கங்கள் முன்னிருந்து பின்னாக பற்றிக்கொள்ள ஆரம்பித்தது. அதிலும் எனக்குபின் நின்ற சகோதரிகள் பேரணி ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை முழக்கங்களை நிறுத்தவேயில்லை. “நடத்துவோண்டா ஜல்லிக்கட்டு தடையைத்தாண்டி துள்ளிக்கிட்டு” எல்லாம் அதில் ஒரு சோறு பதம்.  வந்திருந்தவர்களில் எண்பது சதத்திற்கும் மேல் இளையோர்கள். அதனாலேயே உற்சாகமும் உணர்வெழுச்சியும் அதிகமாக இருந்தது. வெவ்வேறு ஊர்க்காரர்கள், தானே பதாகைகள் தயாரித்து கொண்டுவந்திருந்தவர்கள், வேற்று மொழி சகோதரர்கள் , சில வெளிநாட்டுக்காரர்கள் கூட கலந்து கொண்டனர்.  கூட்டம் மெல்ல மெல்ல அதன் உச்ச கட்ட உணர்வெழுச்சிக்கு செல்கையிலே நடுவிலே வழி ஒதுக்கப்பட்டது,    அலங்கரிக்கப்பட்ட ஜல...