சின்ன வயதில் இருந்தே எனக்கு பல நிறைவேறாத லட்சியங்கள் உண்டு .
அஞ்சாங்ளாஸ் காலத்திலிருந்தே வீட்டில் ஒப்புமை காட்டியே ஓயாமல்
திட்டிக்கொண்டிருப்பார்கள். நாமளும் ஏதாவது பண்ணுவோம் , என்ற நப்பாசையில் விஷப்பரீட்சைகளில்
இறங்கி கை நிறைய மொக்கை வாங்கியதுண்டு .
வீட்டில் உள்ளவர்கள் மனம் திருந்தி பாஸ் மார்க் மட்டுமாவது எடு ராசா என்று கெஞ்ச ஆரம்பித்த போதும் , நான் விடுவதாக இல்லை .
வீட்டில் உள்ளவர்கள் மனம் திருந்தி பாஸ் மார்க் மட்டுமாவது எடு ராசா என்று கெஞ்ச ஆரம்பித்த போதும் , நான் விடுவதாக இல்லை .
நண்பர்கள் எல்லாம் அதற்கேற்ப , ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு அடைமொழியோடு
திரிந்து கொண்டிருந்தான் , கராத்தே சதீஷ் நிறைய்ய கலர் பெல்ட்டுகளை வாங்கி
வைத்திருந்தான் .ஞாயிற்றுக்கிழமைகளில் ஆள் காணாமல் போய்விடுவான் . “எங்க மாஸ்டர்
நாங்க எக்ஸர்சைஸ் பண்ணும்பொது எங்க வயித்தில ஏறி நடந்து போவார் தெரியுமா “ என்று அவன்
(உதார் விடுவதற்காக சொன்னானோ , உண்மையாக சொன்னானோ ) சொன்ன போதே வயிறு கலங்கியது .
முனிபாபு படிப்பாளி , பார்த்திபன் என்.சி.சி என எல்லோருக்கும் தனி அடையாளங்கள் இருந்தது .
சின்ன வயதில் இருந்தே விளையாட்டு மைதானங்கள் என்றால் எனக்கு ஒவ்வாமை, எப்பொழுதும்
ஓடுவதில் கடைசியாகத்தான் வருவேன் என்பதை வாட்ச்மேன் கூட தெரிந்து வைத்திருந்தார்.
பாடலாம் என்ற நப்பாசையை அருள் ஜான்சன் ஆசிட் ஊற்றி அழித்தான் , “வீணையடி நீ எனக்கு” மட்டுமே பாடி பத்தாவது வரை பரிசு வாங்கினான் . அதில் வரும் கண்ணம்மா என்ற ஹை பிட்ச்சை பாடியே தீருவேன் என்ற என் விடா முயற்சியின் பலனாக , குடியிருந்த வாடகை வீட்டை மாற்ற வேண்டியிருந்தது .
பாடலாம் என்ற நப்பாசையை அருள் ஜான்சன் ஆசிட் ஊற்றி அழித்தான் , “வீணையடி நீ எனக்கு” மட்டுமே பாடி பத்தாவது வரை பரிசு வாங்கினான் . அதில் வரும் கண்ணம்மா என்ற ஹை பிட்ச்சை பாடியே தீருவேன் என்ற என் விடா முயற்சியின் பலனாக , குடியிருந்த வாடகை வீட்டை மாற்ற வேண்டியிருந்தது .
பெரும்பாலும் என் முயற்சிகள் மற்றவர்களை பார்த்து சூடு போட்டுக்
கொள்வதாகவே அமைந்திருந்தன . நான் ஒவ்வொரு விஷயத்தையும் முழுதாகக்
கற்றுக்கொள்வதற்குப் பதிலாக , அதன் பலனை ,அதன் மூலம் கிடைக்கும் பெருமையை மட்டுமே
கற்பனை செய்து கொண்டிருந்தேன் .
விளைவு நான் பெரும்பாலும் விஷயங்களை போலியாக செய்து கொண்டிருந்தேன் , எனக்கான தனித்தன்மையை தேடாது நான் மிகையாக பாவனை செய்கிறேன் என்பதே பத்தாவதை தாண்டித்தான் எனக்கு உறைத்தது .அந்த உண்மை மிகவும் வலித்தது , அனால் எனக்கே தெரியாமல் உருப்படியான ஒரு காரியத்தை நான் செய்ய ஆரம்பித்திருந்தேன் , அது வாசிப்பு .
விளைவு நான் பெரும்பாலும் விஷயங்களை போலியாக செய்து கொண்டிருந்தேன் , எனக்கான தனித்தன்மையை தேடாது நான் மிகையாக பாவனை செய்கிறேன் என்பதே பத்தாவதை தாண்டித்தான் எனக்கு உறைத்தது .அந்த உண்மை மிகவும் வலித்தது , அனால் எனக்கே தெரியாமல் உருப்படியான ஒரு காரியத்தை நான் செய்ய ஆரம்பித்திருந்தேன் , அது வாசிப்பு .
எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை கிட்டத்தட்ட ஒரு கர்ப்பத்தை போலே பல
வருடங்களாக சுமந்து கொண்டிருக்கிறேன் , ஒவ்வொரு முறையும் எதோ ஒரு குறை என் கண்ணில்
படும் , இதை மட்டுமாவது உண்மையாக , பிறரின் சாயல்களின்றி துவங்கும் எண்ணம் மட்டுமே
ஊசலாடிக்கொண்டிருந்தது .
என் வாழ்நாளின் சாதனையாக ஒரு வலைப்பூ ஆரம்பிக்க வேண்டும் என கடந்த பல வருடங்களாக முயற்சித்து , பல சோதனைகளை தாண்டி என் பதிவுகளை இந்த சுபயோக சுபதினத்தில் துவங்குகிறேன் .
( மார்ச் 2012 -ல் எழுதியது )
( மார்ச் 2012 -ல் எழுதியது )
வரிகள் ஒவ்வொன்றும் வலிகள்....
ReplyDelete