சங்கப்பாடல்கள் வாசிப்பு என்பது எனக்கு நான் விடுத்துக்கொள்ளும் பெரிய சவால், ஒவ்வொரு பாடலின் நயம் உணர்ந்து படித்து அதை தொகுத்துக்கொள்வது என்பது குறுகிய நேரத்தில் அடையப்படுவதல்ல, விரைவு எனும் சொல்லை இங்கு கைக்கொண்டால் அதன் அழகை முழுதும் அறிய முயலாமையாகப் போய்விடும், வாசிப்பு மனம் அதை பற்றிக்கொள்ளவேண்டும், எனவே தினம் ஒரு பாடல் அல்லது இரு பாடல்கள் மட்டும் என வரையறை செய்த்து கொள்கிறேன்.
நற்றிணை எட்டுத்தொகை நூல்களுள் முதலில் வைக்கப்படுவது, அகத்துறையைச்சார்ந்த நானூறு பாக்களால் ஆனது, ஐந்திணைகளிலும் பாடல்கள் உள்ளன. 1915 ல் பின்னத்தூர் நாராயணசாமி அய்யரால் முதலில் பதிப்பிக்கப்பட்டது.
முதல்பாடல் குறிஞ்சித்திணை சார்ந்தது
நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர்
என்றும் என் தோள் பிரிபு அறியலரே
தாமரை தண் தாது ஊதி மீமிசை
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீர் இன்று அமையா உலகம் போல
தம் இன்று அமையா நம் நயந்து அருளி
நறு நுதல் பசத்தல் அஞ்சி
சிறுமை உறுபவோ செய்பு அறியலரே
இது பிரிவு உணர்த்திய தோழிக்கு தலைவி சொல்லியது.
நான் விரும்பும் ஆண், சொன்ன சொல் தவறாதவன், நீண்ட காலமாகப் பழகுவதற்கு இனியவன். எனது தோள்களை பிரியமாட்டான்.
தாமரையின் குளிர்ந்த தாது - மகரந்தத்தை சேர்த்து மிக உயரத்தில் உள்ள சந்தனமரத்தில் சேர்த்துவைக்கப்பட்ட இனிய தேன் போல உயர்ந்த சுவை உடையது உயர்ந்தோர் காதல்.
நீர் இன்றி இவ்வுலகு அமையாதது போல அவனன்றி அமையாத என்னில் இரக்கம் கொள்பவர், மணமிக்க எனது நெற்றி பசலை கொள்வதை அஞ்சியும் சிறுமை செய்வாரா , இல்லை அவர் அத்தகு செயல்களை செய்தறியாதவர். ஆகவே என்னைப்பிரிய மாட்டார்.
குறிப்பு
தலைவனது குணங்கள் நேரடியாகவே சொல்லப்படுகிறது, பின் உயர்ந்தோர் நட்பு / காதலுக்கு உவமை சொல்லப்படுகிறது, தலைவி தாமரை மலராகவும் தலைவனை உயர்ந்த மலையில் விளங்கும் சந்தன மரமாகவும் சொல்கிறது உவமை. தான் அவனின்றி இருக்க மாட்டேன் என்பதை, நீரின்றி அமையாது உலகு என்னும் உவமையால் சொல்கிறாள் தலைவி. இந்த சொலவடை தமிழ் நிலத்தில் திருக்குறளுக்கு முன்பே இருந்தது என்பதற்கிது சான்று.
நறுநுதல், தீந்தேன், தண்தாது, மீமிசை சாந்து எனும் சொற்கள் அழகியவை, புரையோர் கேண்மை என்பது ஆழம் மிகுந்த சொற்றோடர்.
நற்றிணை எட்டுத்தொகை நூல்களுள் முதலில் வைக்கப்படுவது, அகத்துறையைச்சார்ந்த நானூறு பாக்களால் ஆனது, ஐந்திணைகளிலும் பாடல்கள் உள்ளன. 1915 ல் பின்னத்தூர் நாராயணசாமி அய்யரால் முதலில் பதிப்பிக்கப்பட்டது.
முதல்பாடல் குறிஞ்சித்திணை சார்ந்தது
நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர்
என்றும் என் தோள் பிரிபு அறியலரே
தாமரை தண் தாது ஊதி மீமிசை
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீர் இன்று அமையா உலகம் போல
தம் இன்று அமையா நம் நயந்து அருளி
நறு நுதல் பசத்தல் அஞ்சி
சிறுமை உறுபவோ செய்பு அறியலரே
இது பிரிவு உணர்த்திய தோழிக்கு தலைவி சொல்லியது.
நான் விரும்பும் ஆண், சொன்ன சொல் தவறாதவன், நீண்ட காலமாகப் பழகுவதற்கு இனியவன். எனது தோள்களை பிரியமாட்டான்.
தாமரையின் குளிர்ந்த தாது - மகரந்தத்தை சேர்த்து மிக உயரத்தில் உள்ள சந்தனமரத்தில் சேர்த்துவைக்கப்பட்ட இனிய தேன் போல உயர்ந்த சுவை உடையது உயர்ந்தோர் காதல்.
நீர் இன்றி இவ்வுலகு அமையாதது போல அவனன்றி அமையாத என்னில் இரக்கம் கொள்பவர், மணமிக்க எனது நெற்றி பசலை கொள்வதை அஞ்சியும் சிறுமை செய்வாரா , இல்லை அவர் அத்தகு செயல்களை செய்தறியாதவர். ஆகவே என்னைப்பிரிய மாட்டார்.
குறிப்பு
தலைவனது குணங்கள் நேரடியாகவே சொல்லப்படுகிறது, பின் உயர்ந்தோர் நட்பு / காதலுக்கு உவமை சொல்லப்படுகிறது, தலைவி தாமரை மலராகவும் தலைவனை உயர்ந்த மலையில் விளங்கும் சந்தன மரமாகவும் சொல்கிறது உவமை. தான் அவனின்றி இருக்க மாட்டேன் என்பதை, நீரின்றி அமையாது உலகு என்னும் உவமையால் சொல்கிறாள் தலைவி. இந்த சொலவடை தமிழ் நிலத்தில் திருக்குறளுக்கு முன்பே இருந்தது என்பதற்கிது சான்று.
நறுநுதல், தீந்தேன், தண்தாது, மீமிசை சாந்து எனும் சொற்கள் அழகியவை, புரையோர் கேண்மை என்பது ஆழம் மிகுந்த சொற்றோடர்.
Comments
Post a Comment