நேற்று அலுவலக கூட்டம் ஒன்று நடந்தது, நூற்றி ஐம்பது பேர் கலந்து கொண்டார்கள். ஆமாம், நேர்முக கூட்டம் இல்லை இணையக்கூட்டம் தான். மேலாளாளர் ஸ்ரீ பேச ஆரம்பித்தார். இது அவருடைய கோப்பை தேநீர் இல்லை என்று அறிந்தும்கூட பருக ஆரம்பித்தார். உண்மைத் தலைவர் வேறு எங்கோ கோப்பை தேடியிருக்கலாம்.
தேவகுமாரனை நினைத்துக்கொண்டு சாட்டையை ஒரு சுழற்று சுழற்றினார் மே.ஸ்ரீ . உடனே நம்பியார் கையிலிருந்ததை எம்.ஜி.யார் பறித்ததுபோல பாய்ந்து வந்தார் பெருங்கிழ மேலாளர். கோப்பையை கவ்வ ஆரம்பித்த மே.ஸ்ரீயை அப்படியே பற்றிப்பிழிந்து தூரப்போட்டார்.
உக்கிரம் அடங்காமல் உரையாடினார் பெ.கி.மே , என்னைத்தவிர யாராவது இங்கு பணிபுரிவதுண்டா என்று உறுமினார். மே.ஸ்ரீ முனகலாக 'சாரே கொல மாஸூ' என்றார். புன்னகைத்து 'என்னையும் மே.ஸ்ரீ யும் தவிர' என்று திருத்தினார் பெ.கி.மே.
மற்றுமோர் மென் தூறல் ஞாயிற்றுப் பயணம். மணிமாறன், கடலூர் சீனு அண்ணா, திருமா அண்ணா நான் நால்வரும் எட்டு மணிக்கு மதகடிப்பட்டை தாண்டுகிறோம். சமீபத்தில் வீடு மாற்றி திருவாண்டார் கோவில் வந்துவிட்டேன். மணியும் சீனு அண்ணனும் வீட்டிற்கு இப்போதுதான் வருகிறார்கள் சீனு அண்ணனின் தாடிநீளத்தை பார்த்து கீழ்வீட்டு காளி மிரண்டு துள்ளி எனக்குப்பின்னால் ஒளிந்து கொண்டான். மாலை திரும்பும்போது போனில் சீனு மாமா என்று கொஞ்சிய கவினும் அதேபோல மிரண்டான். பயணம் செஞ்சியை மையமாகக்கொண்டு திட்டமிடப்பட்டது. வழிநெடுக சமணத் தடங்களை அறிவிக்கும் பலகைகள். விழுப்புரம் தாண்டும்போதுதான் முதலில் தளவானூர் செல்வதாக முடிவெடுத்தோம். நானும் தளவானூரை நேரடியாக பார்த்ததில்லை. மணிமாறனுடன் செய்யும் பயணங்களில் உணவு விஷயத்தில் நான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பேன் காலை உணவை ஆறுமணிக்கே வாங்கித்தந்துவிடுவான், மாலை ஆறுமணிக்கு. மாற்று சக்கரத்தில் காற்றில்லை என்று சாலப்பரிந்த புன்னகையோடு மணி சொல்லிக்கொண்டிருக்கும்போது செல்வழியில் ஒரு கடையில் நிறுத்தினோம், புகை கூரை மேலெழுந்து ஒரு கொடிபோல ஆடிக்கொண்டிருந்தது. எளிய சுவை மிகுந்த உணவு, நா...
Comments
Post a Comment