நேற்று அலுவலக கூட்டம் ஒன்று நடந்தது, நூற்றி ஐம்பது பேர் கலந்து கொண்டார்கள். ஆமாம், நேர்முக கூட்டம் இல்லை இணையக்கூட்டம் தான். மேலாளாளர் ஸ்ரீ பேச ஆரம்பித்தார். இது அவருடைய கோப்பை தேநீர் இல்லை என்று அறிந்தும்கூட பருக ஆரம்பித்தார். உண்மைத் தலைவர் வேறு எங்கோ கோப்பை தேடியிருக்கலாம்.
தேவகுமாரனை நினைத்துக்கொண்டு சாட்டையை ஒரு சுழற்று சுழற்றினார் மே.ஸ்ரீ . உடனே நம்பியார் கையிலிருந்ததை எம்.ஜி.யார் பறித்ததுபோல பாய்ந்து வந்தார் பெருங்கிழ மேலாளர். கோப்பையை கவ்வ ஆரம்பித்த மே.ஸ்ரீயை அப்படியே பற்றிப்பிழிந்து தூரப்போட்டார்.
உக்கிரம் அடங்காமல் உரையாடினார் பெ.கி.மே , என்னைத்தவிர யாராவது இங்கு பணிபுரிவதுண்டா என்று உறுமினார். மே.ஸ்ரீ முனகலாக 'சாரே கொல மாஸூ' என்றார். புன்னகைத்து 'என்னையும் மே.ஸ்ரீ யும் தவிர' என்று திருத்தினார் பெ.கி.மே.
நிறுவனத்தில் மேலாளர் ஸ்ரீக்கு பதவி உயர்வோடு நீர்சூழ் தீவாந்திர சிட்சை அளித்திருக்கிறார்கள். அக்கணம் மணமருள் பெருமானை துதித்தபடி அனைத்தையும் கைவிட்டு விட்டு நீங்கிவிட்டார். ஒருவாரம் கழித்து பார்த்தேன், பின் அழகிய சிங்கர் ஒருவருக்கு பரிவட்டம் கட்ட வந்திருந்தார். நலமா என்றேன் ஆமாம் என்று உதடடைந்ததும், காற்று தான் வருகிறது. இருவருடம் முன்புவரை துரத்தித்துரத்தி இவரை அவம் செய்த முதுகிழ மேலாளரும் அதே தீவிற்கு டிக்கெட் எடுத்திருக்கிறார்.

Comments
Post a Comment