விற்பனை மேலாளர் ஒருவர் திடீரென எனது அலுவல் மேசைக்கருகே வந்தார், கீழுதட்டை கடித்துக்கொண்டு அங்குமிங்கும் திரும்பிப்பார்த்தார். யாரிடம் வாங்குப்பட்டார் என்று தெரியவில்லை, மீட்டளிக்க பலிமிருகம் துழாவுகின்றார். என் கணிப்பொறி திரையை உற்றுப் பார்த்தார், சென்றும் விட்டார்.
வெளியே உயரதிகாரி அம்மணியிடம் அவர் கத்திக் கொண்டிருக்கும் சத்தம். திரையிலிருந்த என் குலதெய்வம் காளி யாரையோ மிதித்து நின்றிருந்தாள்.
சிறுபாணாற்றுப்படை குறித்த சிறுபதிவு ஒன்றை இட்டிருந்தேன். https://thamilpanan.blogspot.com/2019/06/blog-post_13.html சில மாதங்கள் கழித்து எழுத்தாளர் விழுப்புரம் கோ.செங்குட்டுவன் விரிவான பதிவு ஒன்றை முகநூலில் இட்டிருந்தார். அதை எனது கட்டுரையின் தேடல்களை எல்லாம் ஆற்றுப்படுத்துவதாகக் கண்டதால் இங்கு பதிவிடுகிறேன். தாமரைக்கண்ணன், புதுச்சேரி. 31.07.2019 ======================= எயிற்பட்டினம் என்னும் மரக்காணம்: ஆழ்கடலில் மூழ்கிய சங்ககாலத் துறைமுகத்தில் கடல்சார் ஆய்வுகள் - முத்துசாமி இரா. மரக்காணம் (English: Marakkanam), விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம் பேரூராட்சியில் அமைந்திருந்த துறைமுகமும் நகர்ப்புற மையமுமாகும் (Seaport and Urban Center) (பின்கோடு 604303). இந்நகரம் பண்டைக் காலத்திலிருந்து எயிற்பட்டினம் (Eyirpattinam), சோபட்டினம் (Sopattinam), சோபட்மா (Sopatma), மனக்கானம் (Manakkanam), போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. “மதிலொடு பெயரியப் பட்டினம்” என்று சிறுபாணாற்றுப்படை சுட்டும் இந்தச் சங...
Comments
Post a Comment