விற்பனை மேலாளர் ஒருவர் திடீரென எனது அலுவல் மேசைக்கருகே வந்தார், கீழுதட்டை கடித்துக்கொண்டு அங்குமிங்கும் திரும்பிப்பார்த்தார். யாரிடம் வாங்குப்பட்டார் என்று தெரியவில்லை, மீட்டளிக்க பலிமிருகம் துழாவுகின்றார். என் கணிப்பொறி திரையை உற்றுப் பார்த்தார், சென்றும் விட்டார்.
வெளியே உயரதிகாரி அம்மணியிடம் அவர் கத்திக் கொண்டிருக்கும் சத்தம். திரையிலிருந்த என் குலதெய்வம் காளி யாரையோ மிதித்து நின்றிருந்தாள்.
நிறுவனத்தில் மேலாளர் ஸ்ரீக்கு பதவி உயர்வோடு நீர்சூழ் தீவாந்திர சிட்சை அளித்திருக்கிறார்கள். அக்கணம் மணமருள் பெருமானை துதித்தபடி அனைத்தையும் கைவிட்டு விட்டு நீங்கிவிட்டார். ஒருவாரம் கழித்து பார்த்தேன், பின் அழகிய சிங்கர் ஒருவருக்கு பரிவட்டம் கட்ட வந்திருந்தார். நலமா என்றேன் ஆமாம் என்று உதடடைந்ததும், காற்று தான் வருகிறது. இருவருடம் முன்புவரை துரத்தித்துரத்தி இவரை அவம் செய்த முதுகிழ மேலாளரும் அதே தீவிற்கு டிக்கெட் எடுத்திருக்கிறார்.

Comments
Post a Comment