Skip to main content

வாசிப்பு மாரத்தான்

காவிரிக்கரைக்காரர்களுக்கு குரல்வளம் சற்று மிகுதி, எட்டுக்கட்டையிலும் பிசிறடிக்காது. "ஏற்கனவே வாங்கியதெல்லாம் படிச்சாச்சு இப்போ புதுசா வேற வாங்கணுமாக்கும், ரெண்டு வருஷத்துக்கு மின்ன வாங்கியதெல்லாம் இன்னும் கவர் பிரிக்காம இருக்கு". இது பொதுவாக கணவர்கள் 'புத்தகக்கண்காட்சிக்குப் போறேம்மா' எனக்குரல் கொடுக்கையில் கிட்டும் எதிரொலி. நான் விதிவிலக்கல்ல. 





சக வாசிப்பு தோஷமுள்ள அண்ணன்கள், வாசிப்பு மாரத்தான் என்னும் தொடர் வாசிப்பு முயற்சியை முன்னெடுத்திருக்கிறார்கள். 48 நாட்களில் நூறு மணிநேர வாசிப்பு என்பது சவால்.  அனுதினம் குறைந்தபட்சம் ஒருமணிநேரமாவது வாசிக்கவேண்டும், இச்சங்கிலி அறுபடலாகாது. இற்றைக்கு பதினைந்து நண்பர்கள் இதில் இணைகிறார்கள். நீண்டநாள் கழித்து, அணித்தேர்வுக்கு அழைக்கப்பட்ட விளையாட்டு வீரருக்கான பதற்றத்தில் அனைவரும் புத்தகங்களை தேர்ந்துகொண்டுள்ளனர். படிப்பு மேசையின் விளக்குகள் பழுதுபார்க்கப்படுகின்றன, நண்பர்களின் புத்தக சேமிப்புகள் உளவு பார்க்கப்படுகின்றன. நான் ஒரு தற்காப்பு முயற்சியாக என் மனைவிக்கும் இதை பரிந்துரைத்திருக்கிறேன். ரொம்ம்ம்பக்கஷ்டமானது என்று உதடு பிதுக்கி சொல்லியிருக்கிறேன், ஆகவே அம்மணி பொறியில் விழ வாய்ப்புள்ளது.

நீண்டநாள் கழித்து உற்சாகமான உரையாடல்கள், போட்டி மனப்பான்மை என்பது உண்மையிலேயே ஆரோக்கியமான சொல்தான் போல. அலமாரியிலுள்ள புத்தகங்களை எல்லாம் வாசித்து முடித்து, ஜனவரி புத்தகக்கண்காட்சியில் வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை மனைவியிடம் நீட்டுவதுபோல கனாக்காண்கிறேன். பேராசை.  

Comments

Popular posts from this blog

மீண்டும் சிறுபாணன்

 சிறுபாணாற்றுப்படை   குறித்த சிறுபதிவு ஒன்றை இட்டிருந்தேன். https://thamilpanan.blogspot.com/2019/06/blog-post_13.html  சில மாதங்கள் கழித்து எழுத்தாளர் விழுப்புரம் கோ.செங்குட்டுவன்  விரிவான பதிவு ஒன்றை முகநூலில் இட்டிருந்தார். அதை எனது கட்டுரையின் தேடல்களை எல்லாம் ஆற்றுப்படுத்துவதாகக் கண்டதால் இங்கு பதிவிடுகிறேன். தாமரைக்கண்ணன், புதுச்சேரி. 31.07.2019  ======================= எயிற்பட்டினம் என்னும் மரக்காணம்: ஆழ்கடலில் மூழ்கிய சங்ககாலத் துறைமுகத்தில் கடல்சார் ஆய்வுகள் - முத்துசாமி இரா.  மரக்காணம் (English: Marakkanam), விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம் பேரூராட்சியில் அமைந்திருந்த துறைமுகமும் நகர்ப்புற மையமுமாகும் (Seaport and Urban Center) (பின்கோடு 604303).  இந்நகரம் பண்டைக் காலத்திலிருந்து எயிற்பட்டினம் (Eyirpattinam), சோபட்டினம் (Sopattinam), சோபட்மா (Sopatma), மனக்கானம் (Manakkanam), போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. “மதிலொடு பெயரியப் பட்டினம்” என்று சிறுபாணாற்றுப்படை சுட்டும் இந்தச் சங...

பொய்

நம் நண்பர் தான் அவர். கொஞ்சம் பழைய புத்தகம், சிலை, பனை சுவடி இதெல்லாம் சேகரிப்பார். பொருள்களின் உண்மையான மதிப்பு தெரிந்தவர் . நான் கொடுத்த தாளின் அடிப்பகுதியில் இருந்த கையெழுத்தையே பார்த்தார். பின் அதை அருகிலிருந்த பூதக்கண்ணாடியை எடுத்து அதன் வழியேயும் பார்த்தார்.பின் நிமிர்ந்து என்னைப்பார்த்து உதடு பிதுக்கினார்,  'ஒண்ணும் இல்லை ' 'கொஞ்சம் நல்லா ....' 'பார்த்துட்டேன் சார், நீங்க நினைக்குராப்ல எல்லாம் இல்ல ' ச்சே, பெருத்த ஏமாற்றம். காலையில் பேங்க்கிலும், அடகுக்கடையிலும் கூட இதே தான் சொன்னார்கள். நேற்று மேலாளரிடம் ஒரு தாளை நீட்டினேன் , வழக்கமான தாமதம் தான் . அதற்கு மனிதருக்கு அருள் வந்துவிட்டது ,  " என்ன, காலம் தாழ்த்தி நான்  கையேழுத்திடவா ? அதன் மதிப்பு தெரியுமா உனக்கு ? "                           உக்கும்  ,                           மனிதர் பொய் சொல்லியிர...

திருவிழா .......

நண்பனின் ஊர்த்திருவிழாவிற்கு போயிருந்தேன் . புதுக்கோட்டை அருகே கீரமங்கலம் எனும் ஊர் . மாற்றங்கள்  இருந்தாலும் கிராமம் இன்னும் கிராமமாகவே இருக்கிறது. எனது திருவிழா, காலையிலே துவங்கி விட்டது, குளத்தின் கரைகளின் வெப்பலில் பல பறவைகளும் பட்டாம்பூச்சிகளும் சுற்றி வந்தன . பெய்த மழை அந்தப்பெருங்குளத்தில் சிறிதே தேங்கி இருந்தது .  நீர் ஆங்காங்கே ஓடைகளாக ஓடி கால் நனைத்துக் கொண்டிருந்தது. வெயில் வெறும் வெளிச்சமாகவே இருந்தது , கண்ணுக்குத்தெரியாத குளுமை எங்களை சூழ்ந்திருந்தது .   வெப்பல் கரைகளில் நிறைய சிறு குருவிகளைப் பார்க்க முடிந்தது , ஆனால் அவை சிட்டுக்குருவிகள் அன்று.  வேகமாகவும் குழுவாக விதவிதமான வடிவங்களிலும் பறக்கும் தி க்ரூட்ஸ் படத்தில் வரும் குருவிகள் போலிருந்தன அவை. இரவு மாரியம்மன் கோவில் திருவிழாவில் 'ஆடலும் பாடலும் ' நடந்தது. மாரி அலங்காரியாக, பூக்களும் பட்டும் பரிவட்டமும்  சூடி சிங்கத்தின் மீதிருந்தாள். விழா மேடையில் நிலாக்காயுது ஓடிக்கொண்டிருந்தது, உச்சகட்டமாக  ஒரு பெண்ணை தூக்கிக்கட்டி அணைத...