Skip to main content

மாமழை



எழுத்தாளர் ஜெயமோகன் எழுதும் வெண்முரசு நூல்வரிசையில் இரண்டாம் நூலான மழைப்பாடல் பற்றி ஈரோட்டில் ஒருமுறை பேசினேன். அதற்காக எழுதத்துவங்கிய குறிப்பு. ஆனால் இதைப்பேச வில்லை. என்றேனும் இதைப் பின்பற்றி எழுதலாம்.

மாமழை

நீள்விசும்பு தன் அருளை ஒரு துளி மண்ணிற்கு அளித்து உயிர்க்குவை யாவையும் முகிழ்க்கச்செய்கிறது. அவ்விண் துளி வேண்டி, வெடித்து வரியோடிய நிலத்தின் இடுக்குகளின் உள்ளிருந்து வித்துக்கள் யாவும்  மொத்த வானத்தையும் குடித்துவிடும் விடாய் கொண்டு உயிர் உயிர் என ஓட்டுக்குள் தீராத்தவம் செய்கின்றன. தன் வஞ்சத்தை எதிராளியிடம் காட்டாது கரப்பவன் போல் இருண்மை கொண்டு வானைமூடும் முகில்களிடையே மின் என வெட்டி அதிர்கிறது மெய்ப்பொருள். தொலைந்த பிள்ளையை கூட்டத்தில் தேடுபவன் விழியென பெருநிலம் யாவையும் பரிதவிப்போடு தழுவிக்கொள்கிறது மாமழை.

முதலில் அது மணமென எழுந்து நாசி வழியே உள்ளுடலை விழிக்கச்செய்கிறது. மென்காற்றெனத்தழுவி குளிரை ஏற்றி மயிர் கூச்சரியச்செய்கிறது, உள்ளோடும் குருதியின் வெம்மையை கூரான துளிகளால் உணர்த்தி உடெலெங்கும் பரவச்செய்கிறது. உள்வெம்மையை உணருந்தோரும் தன் உடலின் திண்மையையும், காற்று மேலிட அலைகளாகி வந்தறைந்து கூசி நடுங்கச்செய்யும் போதெல்லாம் பிள்ளைப்பிராயத்தின் நொய்மையையும் அறியச்செய்கிறது. எதிர்நிற்பவனின் முழுக்கவனத்தையும் தன்னகத்தே திருப்பும் குழந்தை அல்லவா மழை. விண்ணையும் மண்ணையும் இணைக்கும் அலகிலா சரங்கள் ஒவ்வொன்றிலும் புவிலுள்ள ஒவ்வோர் அணுவுக்கும் விண்ணிலிருந்து விழி விழி எனும் செய்தி வந்து கொண்டேயிருக்கிறது.

புவியில் அனைத்தையும் பருப்பொருளாக கண்டு அறியும் அறிவுக்கெட்டாததாய் ஏழ்வானுக்கு அப்பால் எங்கோ இருக்கிறது வித்து உயிர் கொள்ளும் ரகசியம். இருக்கிறேன் என்னும் உணர்வுக்கும் முந்தையது அது. தேர்ந்த கருமான் ஒருவன் இதுவே அது என தன் பெட்டியிலிருந்து ஓர் திருகாணியை எடுத்து பொருத்துவது போல்  ஒவ்வோர் வடிவத்துக்குள்ளும் உயிரை வைத்து அனுப்பும் இறைவனது முகங்களில் உறையும் களிப்பே  அந்த உயிரனலை எழுப்பும் உலைத்துருத்திக்காற்று என்க.

தாமரைக்கண்ணன்
புதுச்சேரி 
07.08.2019

Comments

Popular posts from this blog

மீண்டும் சிறுபாணன்

 சிறுபாணாற்றுப்படை   குறித்த சிறுபதிவு ஒன்றை இட்டிருந்தேன். https://thamilpanan.blogspot.com/2019/06/blog-post_13.html  சில மாதங்கள் கழித்து எழுத்தாளர் விழுப்புரம் கோ.செங்குட்டுவன்  விரிவான பதிவு ஒன்றை முகநூலில் இட்டிருந்தார். அதை எனது கட்டுரையின் தேடல்களை எல்லாம் ஆற்றுப்படுத்துவதாகக் கண்டதால் இங்கு பதிவிடுகிறேன். தாமரைக்கண்ணன், புதுச்சேரி. 31.07.2019  ======================= எயிற்பட்டினம் என்னும் மரக்காணம்: ஆழ்கடலில் மூழ்கிய சங்ககாலத் துறைமுகத்தில் கடல்சார் ஆய்வுகள் - முத்துசாமி இரா.  மரக்காணம் (English: Marakkanam), விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம் பேரூராட்சியில் அமைந்திருந்த துறைமுகமும் நகர்ப்புற மையமுமாகும் (Seaport and Urban Center) (பின்கோடு 604303).  இந்நகரம் பண்டைக் காலத்திலிருந்து எயிற்பட்டினம் (Eyirpattinam), சோபட்டினம் (Sopattinam), சோபட்மா (Sopatma), மனக்கானம் (Manakkanam), போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. “மதிலொடு பெயரியப் பட்டினம்” என்று சிறுபாணாற்றுப்படை சுட்டும் இந்தச் சங...

பொய்

நம் நண்பர் தான் அவர். கொஞ்சம் பழைய புத்தகம், சிலை, பனை சுவடி இதெல்லாம் சேகரிப்பார். பொருள்களின் உண்மையான மதிப்பு தெரிந்தவர் . நான் கொடுத்த தாளின் அடிப்பகுதியில் இருந்த கையெழுத்தையே பார்த்தார். பின் அதை அருகிலிருந்த பூதக்கண்ணாடியை எடுத்து அதன் வழியேயும் பார்த்தார்.பின் நிமிர்ந்து என்னைப்பார்த்து உதடு பிதுக்கினார்,  'ஒண்ணும் இல்லை ' 'கொஞ்சம் நல்லா ....' 'பார்த்துட்டேன் சார், நீங்க நினைக்குராப்ல எல்லாம் இல்ல ' ச்சே, பெருத்த ஏமாற்றம். காலையில் பேங்க்கிலும், அடகுக்கடையிலும் கூட இதே தான் சொன்னார்கள். நேற்று மேலாளரிடம் ஒரு தாளை நீட்டினேன் , வழக்கமான தாமதம் தான் . அதற்கு மனிதருக்கு அருள் வந்துவிட்டது ,  " என்ன, காலம் தாழ்த்தி நான்  கையேழுத்திடவா ? அதன் மதிப்பு தெரியுமா உனக்கு ? "                           உக்கும்  ,                           மனிதர் பொய் சொல்லியிர...

திருவிழா .......

நண்பனின் ஊர்த்திருவிழாவிற்கு போயிருந்தேன் . புதுக்கோட்டை அருகே கீரமங்கலம் எனும் ஊர் . மாற்றங்கள்  இருந்தாலும் கிராமம் இன்னும் கிராமமாகவே இருக்கிறது. எனது திருவிழா, காலையிலே துவங்கி விட்டது, குளத்தின் கரைகளின் வெப்பலில் பல பறவைகளும் பட்டாம்பூச்சிகளும் சுற்றி வந்தன . பெய்த மழை அந்தப்பெருங்குளத்தில் சிறிதே தேங்கி இருந்தது .  நீர் ஆங்காங்கே ஓடைகளாக ஓடி கால் நனைத்துக் கொண்டிருந்தது. வெயில் வெறும் வெளிச்சமாகவே இருந்தது , கண்ணுக்குத்தெரியாத குளுமை எங்களை சூழ்ந்திருந்தது .   வெப்பல் கரைகளில் நிறைய சிறு குருவிகளைப் பார்க்க முடிந்தது , ஆனால் அவை சிட்டுக்குருவிகள் அன்று.  வேகமாகவும் குழுவாக விதவிதமான வடிவங்களிலும் பறக்கும் தி க்ரூட்ஸ் படத்தில் வரும் குருவிகள் போலிருந்தன அவை. இரவு மாரியம்மன் கோவில் திருவிழாவில் 'ஆடலும் பாடலும் ' நடந்தது. மாரி அலங்காரியாக, பூக்களும் பட்டும் பரிவட்டமும்  சூடி சிங்கத்தின் மீதிருந்தாள். விழா மேடையில் நிலாக்காயுது ஓடிக்கொண்டிருந்தது, உச்சகட்டமாக  ஒரு பெண்ணை தூக்கிக்கட்டி அணைத...