Skip to main content

அருள் செய்ய வேண்டும் அய்யா


ஆனந்த பைரவி என்றொரு மலையாளப்படம் ஒன்று, சிறுபிள்ளை ஒருவன் யாரும் கற்பிக்காமலே இசைஞானம் பெற்று பெரும்பாடகனாகி வரும் கதை. மலையாள சினிமாவுக்கே உள்ள இயல்பும் அழகியலும் நிறைந்த படம், அற்புதமான பாடல்கள் உள்ள படம்.

 நான் வேலூரில் இருந்தபோது - 60 வயதே நிரம்பிய எனது தோழர் ஒருவர், பாடல்களின் இனிமைக்காக கைகாட்டிய  படம் இது.  பாட்டு சொல்லித்தரும் பாகவதரிடம் தவறாக சொல்லிக்கொடுக்கிறார் என்று சக குழந்தைகள் முன் கிண்டல்செய்து விட்டு வீட்டுக்கு ஓடிவந்துவிடுவான் சிறுவன் . பின் தன தந்தையிடம் அடிவாங்கியபடியே அவர் பாடலில் உள்ள பிழையை சுட்டிக்காட்டுவான்.

 வியந்து போன பாகவதர் அவனது இசை அறிவை சோதிப்பதற்காக மேளகர்த்தா ராகங்கள் எத்தனை என்பது போன்ற கேள்விகளை கேட்பார், மழலை மொழியில் சரியான பதில்கள் வரும்.  இறுதியாக எழுபத்தி ரெண்டாவது மேளகர்த்தா ராகம் என்ன என்றவுடன் ரசிகப்ரியா என்பான் குழந்தை, ஒண்ணு பாடு என்று கேட்டவுடன் அருள்செய்ய வேண்டுமய்யா என்ற பாடலை பாடுவான்.  அருமையான பாடல் அது கோடீஸ்வர அய்யர் என்பவர்  இயற்றிய பாடல், அரிய ராகம். நெடுநாள் என் காதில் ரீங்கரித்துக்கொண்டிருந்த பாடல் இது.

யூ டியூபில் தேடக் கிடைக்கிறது பாடல், வரிகள் மட்டும் இங்கே..

 பல்லவி


அருள் செய்ய வேண்டும் அய்யா,
அரசே முருகையா
நீ அருள் செய்ய வேண்டும் அய்யா

அனுபல்லவி 
 


மருள் உறவே என்னை மயக்கிடும் மாய

வல்லிருள் அறவே ஞான சூரியன் என வந்தோர் சொல்

சரணம் 
 


காரணம்

நிலைய காயம் இல்லையே இதனை

நிலையென்றுண்ணுவது என்ன மாயம்

நிலைஎன்றுன்னையே நினைந்து நான் உய்ய

நேச கவி குஞ்சரதாச ரசிகப்பிரிய 
 


Pallavi
aruL seyya vENDum ayyA(nI) arasE murugayya (nI aruL…)

My Lord (
arasE), murugA (murugayyA) you (nI) have to shower (seyya vENDum) your grace (aruL) (on me)!

anupallavi
maruL uravE ennai mayakkiDum mAya
valliruL aravE jnAna sUriyan ena vandOr sol (aruL seyya…)

Please appear/come (
vandu) like (ena) the sun (sUriyan) of knowledge (jnAna) (and bless me, Oh murugA) with a (Or) word (sol) [1] that will dispel (aravE) the deep darkness (valliruL) of illusion (mAya) intoxicating (mayakkiDum) and entangling (uravE) me in a web of desire (maruL).

caraNam
nilaiya kAyam ilaiyE idanai
nilayenReNNuvadu enna mAyam
nilaiyenRunnaiyE ninaindu nAn uyya
nEsa kavi kunjaradAsa rasikapriya (aruL seyya…)

This body (
kAyam) is not (ilayE) eternal (nilaiya), so what is this (enna) illusion (mAyam) that makes us believe (eNNuvadu) that it (idanai) is permanent (nilaiyenRu)? Oh one who is dear (priya) to the fan (rasika), the loving (nEsa) servant (dAsa), of the poet (kavi) kunjara (bhArati) [2], (you have to bless me, Oh murugA), so that I (nAn) can achieve excellence (uyya) in life by accepting/thinking of you alone (unnaiyE) as the eternal one (nilaiyenRu)!

FOOTNOTES
[1] the word (sol) I think is the
praNava – Om
[2] The composer, Sri
Koteeswara Iyer was brought up by his maternal grand-father, who was Kavi Kunjara Bharati – Sri KI called himself ‘kavi kunjara dAsan’ – his mudra

Comments

Popular posts from this blog

மரபுப் பயணம்

புதுவையின் நுழைவாயிலான மதகடிப்பட்டு கடந்த ஞாயிறு (1.4.18) அன்று தமிழகத்தின் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த சரித்திர ஆர்வலர்களை வரவேற்கும் இடமாக ஆகியிருந்தது. சோழர் வரலாற்று ஆய்வு சங்கம் ஒருங்கிணைத்திருந்த மரபுநடை அங்கிருந்துதான் துவங்கியது. புதுவை கடலூர் விழுப்புரம் அன்பர்கள் அன்றியும் சேலம் பெரம்பலூர் வேலூர் நண்பர்களும் சென்னைவாசிகளாக மாறிவிட்ட பல்லூர்க்காரர்களும் குழுமியிருந்தனர்.  ஜெயங்கொண்ட சோழமண்டலம், திரிபுவனமாதேவி சதுர்வேதிமங்கலத்தின் ஒருபகுதியான குந்தாங்குழி மகாதேவர் கோவிலில் இருந்து துவங்கினோம். பூவுதிரும் அசோக மரத்தடியில் இருந்து எழுபதே வயதேயான பேரிளைஞரான திரு வீரராகவன் எங்கள் கைபற்றி சோழர் காலத்துக்குள் கூட்டிச்சென்றார். சோழர்கால கோவில்கள், கல்வெட்டுகளில் குறிக்கப்பட்ட நிவந்தங்கள், நிவந்தங்களின் வகைகள், சோழர் கல்வெட்டுக்கும், பல்லவர் கல்வெட்டுக்குமான துவக்க வரிகள் என கடைசியிருக்கை எம்மனோர்க்கு எளிதில் விளங்காதவற்றை எளிமையாக விளக்கி  சொன்னார். அவரது பேச்சு கொண்டுசெல்லும் வழியெங்கும் நிரம்பி உதிரும் பூக்கூடை போல இருந்தது, அவரிடமிருந்து வரலாற்றுத்தகவல்கள் வந்து விழுந்து

மந்தஹாசம்

மேலாளர் அழைத்தார் என்ன என்றேன், நான் இரு நாட்களாக  இங்கில்லை, லீவ்  என்றார், தெரியும் என்றேன் புன்னகையுடன். எனது கணினி ஏன் திறப்பில் உள்ளது என்றார், முகத்தில் புன்னகை இல்லை. உற்றுப்பார்த்தேன், ஆம். தகவல்திருட்டு மிகவும் மோசமான விஷயம், அதுவும் நம்பிக்கை மோசடி தர்மத்துக்கு மாறானது. ஆழ்ந்த அமைதி, அலுவலகத்தின் பெண்பாலினர் அனைவரும் கடவுச்சொல் அறிவர், என்செய. "சார் ஒருவேள" என்று துவங்கி, அவர் வயதொத்த மூத்த பெண்மணி ஒருவரது பெயரை உச்சரித்தேன், மனிதர் முகத்தில் பெருமிதம் கலந்த மந்தஹாசம்.

அறிதுயில்

மற்றுமோர் மென் தூறல் ஞாயிற்றுப் பயணம். மணிமாறன், கடலூர் சீனு அண்ணா, திருமா அண்ணா நான் நால்வரும் எட்டு மணிக்கு மதகடிப்பட்டை தாண்டுகிறோம். சமீபத்தில் வீடு மாற்றி திருவாண்டார் கோவில் வந்துவிட்டேன். மணியும் சீனு அண்ணனும் வீட்டிற்கு இப்போதுதான் வருகிறார்கள் சீனு அண்ணனின் தாடிநீளத்தை பார்த்து கீழ்வீட்டு காளி மிரண்டு துள்ளி எனக்குப்பின்னால் ஒளிந்து கொண்டான். மாலை திரும்பும்போது போனில் சீனு மாமா என்று கொஞ்சிய கவினும் அதேபோல மிரண்டான். பயணம் செஞ்சியை மையமாகக்கொண்டு திட்டமிடப்பட்டது. வழிநெடுக சமணத் தடங்களை அறிவிக்கும் பலகைகள். விழுப்புரம் தாண்டும்போதுதான் முதலில் தளவானூர் செல்வதாக முடிவெடுத்தோம். நானும் தளவானூரை நேரடியாக பார்த்ததில்லை. மணிமாறனுடன் செய்யும் பயணங்களில் உணவு விஷயத்தில் நான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பேன் காலை உணவை ஆறுமணிக்கே வாங்கித்தந்துவிடுவான், மாலை ஆறுமணிக்கு. மாற்று சக்கரத்தில் காற்றில்லை என்று சாலப்பரிந்த புன்னகையோடு மணி சொல்லிக்கொண்டிருக்கும்போது செல்வழியில் ஒரு கடையில் நிறுத்தினோம், புகை கூரை மேலெழுந்து ஒரு கொடிபோல ஆடிக்கொண்டிருந்தது. எளிய சுவை மிகுந்த உணவு, நா