நேற்று அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடந்ததா என்றார் மேலாளர்.
ஆம்
அந்தத்தகவலை ஏன் என்னிடம் சொல்லவில்லை
அமைதி
நான் கூட்டத்தில் ..
அந்தக்கூட்டத்தை நடத்த நான் எவ்வளவு முயற்சித்தேன் தெரியுமா, நான் இல்லாத வேளையில், எனக்குத்தெரியாமல் நடத்தி விட்டார்கள், எல்லாரும் நம்பிக்கை மோசம் செய்கிறார்கள்.
இல்லை நான் ..
நீயும் சேர்ந்து இப்படியெல்லாம் செய்வது வருத்தமாக இருக்கிறது.
மூத்த மேலாளருக்கும் கொஞ்சம் கூட புத்தி அறிவு வேண்டாமா, நான் எவ்வளவு முக்கியமானவன். குரல் கம்மியது. முகம் சிவந்தது.
அருகில் அம்மணி நின்று புன்னகைத்தாள்.
பாவம்தான். காத்திருந்து செய்திருக்கிறார்கள்.
Comments
Post a Comment